உலகம் செய்திகள் புதிய செய்திகள்

திருமணம் முடிந்த 3 மாதங்கள்! கணவனுடன் பரிதாபமாக பலியான கர்ப்பிணி பெண்

பிரித்தானியாவில் திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் கணவனுடன் சேர்ந்து விபத்தில் சிக்கி பலியாகியிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு லண்டன் பகுதியில் ஹாரோ பகுதியில் 60, 30 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் 50 வயதுடைய ஒரு பெண் இருக்கும் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் 4 பேர் கத்தி முனையில் கொள்ளையடிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஹெலிகாப்டர் மற்றும் 9 கார்களில் ஏராளமான பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட அந்த கும்பல் வேகமாக அந்த இடத்திலிருந்து காரில் கிளம்பியது.
கார் செல்லக்கூடிய தவறான பாதையில் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் இடையூறு அளிக்கும் வகையிலும், பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பும் விதமாகவும் அந்த கும்பல் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது.
அப்பொழுது அந்த கார், திடீரென சாலை ஓரத்தில் இருந்த வேலியின் மீது மோதி பயங்கரமான விபத்தில் சிக்கியது.
இதனை பார்த்ததும் வேகமாக ஓடி வந்த பொலிஸார் உள்ளிருந்தவர்களை பிடிக்க முயற்சித்த போது, ஒரு பெண்ணும், ஆணும் உயிரிழந்த நிலையிலும், மற்றோரு நபர் பலத்த காயங்களுடனும் இருப்பதை பார்த்துள்ளனர்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த நபரை சிகிச்சைக்கு உட்படுத்தி கைது செய்தனர். பின்னர் இறந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, பேட்ரிக் மெக்டொனாக்கம் (19) மற்றும் ஷானு (18) என்கிற தம்பதியினர் 11 வாரங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.
மேலும், ஷானு 7 மாத கர்ப்பிணியாக இருந்ததும், ஏப்ரல் மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த பயங்கரமான சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் பேட்ரிக்கிற்கு தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகித்துள்ளனர்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment