சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

நண்பா

ஒரு ஊரில் ஒரு பெரிய ஆற்றங்கரை இருந்தது. அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு பெரிய அரச மரமும் இருந்தது. அந்த அரச மரத்தின் கிளையில் ஒரு புறா எப்போதும் வந்து அமர்வது வழக்கம்.

அப்படி ஒரு நாள் அந்த மரக்கிளையில் புறா அமர்ந்து ஆற்றில் ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது ஆற்று நீரில் ஒரு கட்டெறும்பு சிக்கி தத்தளிப்பதைக் கண்டது.

மறுநிமிடம் அந்தப் புறாவிற்கு அந்தக் கட்டெறும்பின் மீது பரிதாபமும், இரக்கமும் பிறந்தது.

மறுவினாடி அது ஏதோ சிந்தித்து விட்டு அரச மரத்தின் இலையில் ஒன்றை பறித்து எறும்பு தத்தளிக்கும். இடத்திற்கு சற்று முன்னால் போட்டது.

ஆற்று நீருடன் மெல்ல அடித்து வரப்பட்ட எறும்பு அந்த அரச இலையின் மீது பட்டதும் கப்பென அந்த இலையைப் பற்றிக் கொண்டது.

இலைகள் நீரில் அமிழாது அல்லவா? எனவே, அந்த இலையின் மீது ஊர்ந்த எறும்பும் நீருக்குள் அமிழாமல் கரையோரம் இலையுடன் வந்தது.

கரையில் இலை ஒதுங்கியதும் இலையை விட்டு இறங்கியது. மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த புறாவிற்குத் தனது நன்றியைக் கூறியது.

தினந்தோறும் எறும்பும், புறாவும் அதே மரத்திடியில் சந்தித்தன. இரண்டும் நல்ல சிநேகிதர்களாயின.

ஒரு நாள் அந்த மரத்தடிக்கு ஒரு வேடன் வந்தான். அவன் மரக்கிளையில் அமர்ந்திருந்த புறாவைக் கண்டான். ஆனால், வேடன் வந்ததையோ, அவன் தன்னைப் பர்த்ததையோ புறா கவனிக்கவே இல்ல.

வேடன் தன் அம்பையும், வில்லையும் எடுத்தான். மரக்கிளையில் இருந்த புறாவை நோக்கி குறி வைத்தான். ஏதும் அறியாத புறா பேசாமல் எங்கோ பார்த்தபடி இருந்தது. ஆனால், வேடனின் காலடியில் நின்ற எறும்பிற்கு வேடன் தனது நண்பனான புறாவை குறி வைப்பது வெகு எளிதில் தெரிந்துவிட்டது.

உடனே தன் நண்பனின் உயிரை காப்பது எத்தனை அவசியமானது என்பதை உணர்ந்தது. அடுத்த நிமிடம் அந்த வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது. எதிர்பாராமல் கட்டெறும்பு கடித்த வலியில் வேடனின் குறி தவறியது. அவன் எய்த அம்பு எங்கோ போய் விழுந்தது.

இப்படி ஏற்பட்ட திடீர் சத்தத்திலும், சலசலப்பிலும் கவனம் சிதறிய புறா வெடுக்கென திரும்பியது. மறுநிமிடம் தனக்கு வரவிருந்த பேராபத்தை உணர்ந்தது.

தன் நண்பனான எறும்பு தன்னைக் காப்பாற்றியதையும் உணர்ந்தது. மறுபடியும் வேடன் தன்னை நோக்கி குறி வைக்கும் முன்பாக அந்த இடத்தை விட்டுப் பறந்தது.

மறு நாள் தன் நண்பனான எறும்பைப் பார்த்து நன்றி தெரிவித்தது. இரண்டும் ஒன்றின் உயிரை ஒன்று காப்பாற்றிய நன்றியில் கடைசிவரை நட்புடன் இருந்தன.

நீதி : நாம் ஒருவருக்கு உதவினால் நிச்சயம் நமக்கு தேவைப்பட்ட சமயத்தில் உதவ யாரேனும் வருவர்.

Recent posts

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல,...
Thamil Paarvai

எப்படி இவரால் மட்டும் சுலபமாக செய்ய முடிகிறது..??

ஒரு நாள், சில இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக காட்டிற்குச் சென்றனர். அவர்கள் சிறிது தூரத்தில் ஒரு சில பானைகளை வைத்து அதை நோக்கி குறி வைத்தனர்....
Thamil Paarvai

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா..?

ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார்....
Thamil Paarvai

சுண்டெலியின் பயம்

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன...
Thamil Paarvai

வாய்மையே வெல்லும்

ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள...
Thamil Paarvai

Leave a Comment