Featured Uncategorized உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர் நகரத்தின் சின்னமான பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தது.

கப்பலின் விளக்குகள் திடீரென அணைந்ததால், கப்பலில் இருந்த பணியாளர்கள் இருளில் மூழ்கினர்.

மின்னணு சாதனங்கள் ஏதும் இல்லை. இயந்திரம் செயலிழந்துவிட்டது. கப்பலில் இருந்தவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். நடப்பது எதையும் தடுக்க முடியவில்லை.

சிக்கலைச் சரிசெய்து மீண்டும் கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தோல்வியுற்றன. பல சோதனை முயற்சிகள் செய்யப்பட்டதால் ஏராளமான அலாரங்கள் ஒலித்தன.

கப்பலில் இருந்த ஒரு உள்ளூர் மாலுமி வெறித்தனமாக கட்டளையிட்டார். சுக்கான் துறைமுகத்திற்கு கப்பலைத் திருப்பவும், பாலத்தை நோக்கி நகர்வதைத் தடுக்க நங்கூரத்தை இறக்கவும் பணியாளர்களிடம் கூறினார்.

எமர்ஜென்சி ஜெனரேட்டர் ஆன் செய்யப்பட்டதாக நம்பப்பட்டாலும், கப்பல் அதன் என்ஜின்களின் திறனை மீண்டும் பெறவில்லை.

மாலுமிகள் வேறு வழியின்றி தவித்தனர். உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.30க்கு சற்று முன், அவர்கள் கடைசி நேர அவசர அழைப்பை (Mayday Call) விடுத்தனர். கப்பல் மோதப்போகிறது என்று எச்சரித்தனர்.

மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கப்பல் குழுவினரை “ஹீரோக்கள்” என்று பாராட்டியதற்கு இந்த அவசர அழைப்புதான் காரணம். அவர்களின் விரைவான நடவடிக்கை “உயிர்களைக் காப்பாற்றியது” என்று கூறினார். ஏனெனில் அழைப்புக்கும் மோதலுக்கும் இடையிலான இரண்டு நிமிடங்களில் பாலத்தின் மீது வாகனப் போக்குவரத்தை அதிகாரிகளால் நிறுத்த முடிந்தது.

ஆனாலும், 2.4 கிமீ நீள பாலத்தின் மீது ஒரு கான்கிரீட் தூணில் 948 அடி நீள கன்டெய்னர் கப்பலான டாலி கப்பல் மோதுவதை அவர்களால் நிறுத்த முடியவில்லை. படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இருண்ட, குளிர்ந்த நீரில் துண்டு துண்டாக இடிந்து விழுந்தது.

கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள். கப்பலின் பணியாளர்கள் யாருக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

47 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது, நாள்தோறும் சுமார் 30,000 மேரிலேண்ட் மக்களுக்கு இது ஒரு வழக்கமான பயணப் பாதையாகும்.

டாலி கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Recent posts

0x1c8c5b6a

0x1c8c5b6a
admin

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

Leave a Comment