சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

பறக்கும் குதிரை

பெர்ஷியாவின் சுல்தான் என்பவர் விந்தையான பொருள்களைக் கண்டால், அதை அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன் மாயக் குதிரை ஒன்றில் ஏறி அரண்மனை உப்பரிகை மேல் பறந்து கொண்டிருந்தான்.

இந்த அற்புதமான குதிரையின் விலை என்ன? என்று கேட்டார் சுல்தான். அந்த இளவரசன், இளவரசியைக் கை பிடிப்பது! என்று கூறினான்.

சுல்தானும் ஒத்துக்கொண்டார். ஆனால், என்னுடைய மகன் முதலில் இந்தக் குதிரை மீது அமர்ந்து பறப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்! என்று சுல்தான் கூறினார்.

சுல்தானின் மகன் குதிரை மீது அமர்ந்ததும் அது பறந்து எல்லாருடைய பார்வையிலிருந்தும் மறைந்து விட்டது.

சுல்தானின் மகன் திரும்பி வராததால் சுல்தானும், அமைச்சர்களும் கவலை கொண்டனர். அவர்கள் இளவரசனைக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தனர்.

சுல்தானின் மகன் காற்றில் பறந்து கொண்டே இருந்தான். அவனால் அந்த மாய குதிரையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. பல நாட்களுக்கு பிறகு அவன் வந்தான். அரண்மனையில் எல்லாரும் மகிழ்ச்சியடைந்தனர்.

அவன் திரும்பி வந்ததால் அந்த இளவரசனை விடுவித்தனர். ஆனால், அந்த இளவரசனை அவர்கள் அவமானப்படுத்திவிட்டதால், அவர்களை பழிவாங்க வேண்டும் எனச் சபதமிட்டான்.

சுல்தானின் அரண்மனையில் இளவரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இளவரசியைக் குணப்படுத்துபவர்களுக்குச் சிறந்த வெகுமதி அளிக்கப்படும் என்று சுல்தான் கூறினார். இளவரசன் மருத்துவன் போன்று மாறுவேடமணிந்து சுல்தானின் அரண்மனைக்கு சென்றான்.

முதலில் மந்திரக் குதிரையையும், இளவரசியையும் என்னிடம் அழைத்து வாருங்கள்! எனக் கூறினான்.

மந்திரக் குதிரையும், இளவரசியும் வந்த பின்பு தன் மந்திரசக்தியைப் பயன்படுத்தி, இளவரசியைக் குணப்படுத்தி தன்னுடைய மாயக்குதிரை மீது அமர்த்திக் கொண்டு பறந்து சென்று விட்டான்.

யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவனது சொந்தமான பொருளை அவனே அடைந்து கொண்டான்.

நீதி : நமது சொந்த பொருளை யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தேவையில்லை.

Recent posts

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல,...
Thamil Paarvai

எப்படி இவரால் மட்டும் சுலபமாக செய்ய முடிகிறது..??

ஒரு நாள், சில இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக காட்டிற்குச் சென்றனர். அவர்கள் சிறிது தூரத்தில் ஒரு சில பானைகளை வைத்து அதை நோக்கி குறி வைத்தனர்....
Thamil Paarvai

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா..?

ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார்....
Thamil Paarvai

சுண்டெலியின் பயம்

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன...
Thamil Paarvai

வாய்மையே வெல்லும்

ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள...
Thamil Paarvai

Leave a Comment