பிராம்டனில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் பீல் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சுமார் 4 மணியளவில் Charolais Boulevard பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், 22 வயது இளைஞருடன் மோதல் போக்கில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் அந்த இளைஞர் மருத்துவ உதவியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டார் என சிறப்பு விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த இளைஞர் காயமடைந்த காரணம் விசாராணையில் இருப்பதாக பொலிசார் கூறுகின்றனர். இந்த நிலையில் குறித்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
உறவினர்கள் அடையாளம் காணப்படும் வரையில், அந்த இளைஞர் தொடர்பில் தகவல் வெளியிடப்படாது என கூறப்படுவதுடன் சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.