Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மகன் ஆர்ச்சியுடன் இணைந்து ராணியாரிடம் பேசிய மேகன் மெர்க்கல்: அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்.

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னர் மகன் ஆர்ச்சியுடன் இணைந்து மேகன் மெர்க்கல் ராணியாரிடம் பேசியதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தாத்தாவின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா திரும்பியிருந்த கணவர் ஹரியிடமும் மேகன் மெர்க்கல் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.

இளவரசர் ஹரியை பொருத்தமட்டில், பிரித்தானியாவுக்கான பயணம் என்பது தற்போதைய சூழலில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என அறிந்து கொண்ட நிலையிலேயே, மேகன் மெர்க்கல் தொடர்ந்து ஹரியை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

9 நாட்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்த ஹரி, நேற்று லண்டனில் இருந்து கலிபோர்னியா திரும்பியுள்ளார். இந்த 9 நாட்களில் ஒரே ஒருமுறை மட்டுமே, தந்தை சார்லசுடனும் சகோதரர் வில்லியமுடனும் தனிப்பட்டமுறையில் ஹரி பேசியுள்ளார்.

அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே அமைந்தது என்றே அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனாலையே, பேசித்தீர்க்க வேண்டியவை, துவக்க கட்டத்திலேயே நீடிப்பதாக அரண்மனை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

WINDSOR, ENGLAND – APRIL 17: Princess Anne, Princess Royal, Prince Charles, Prince of Wales, Prince Andrew, Duke of York, Prince Edward, Earl of Wessex, Prince William, Duke of Cambridge, Peter Phillips, Prince Harry, Duke of Sussex, Earl of Snowdon David Armstrong-Jones and Vice-Admiral Sir Timothy Laurence follow Prince Philip, Duke of Edinburgh’s coffin during the Ceremonial Procession during the funeral of Prince Philip, Duke of Edinburgh at Windsor Castle on April 17, 2021 in Windsor, England. Prince Philip of Greece and Denmark was born 10 June 1921, in Greece. He served in the British Royal Navy and fought in WWII. He married the then Princess Elizabeth on 20 November 1947 and was created Duke of Edinburgh, Earl of Merioneth, and Baron Greenwich by King VI. He served as Prince Consort to Queen Elizabeth II until his death on April 9 2021, months short of his 100th birthday. His funeral takes place today at Windsor Castle with only 30 guests invited due to Coronavirus pandemic restrictions. (Photo by Justin Tallis/WPA Pool/Getty Images)

இளவரசர் ஹரி பிரித்தானியாவில் தங்கியிருந்த 9 நாட்களும், நிறைமாத கர்ப்பிணியான மேகன் மெர்க்கல் தமது கணவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

தமது மகன் ஆர்ச்சி மற்றும் மேகனை இந்த நிலையில் தனியாக விட்டுவர ஹரி விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனாலையே, தாங்கள் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக, மேகன் தினசரி தமது கணவருக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஹரி- மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியிருக்க தொடங்கிய நாள் முதலே, ராணியாரும் இளவரசர் பிலிப்பும் அடிக்கடி நேரலையில் பேசிக்கொள்வதாக இளவரசர் ஹரியே முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

அரண்மனைக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவர் தெரிவிக்கையில், கடந்த ஓராண்டு காலம் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு கடினமான ஒன்று எனவும்,

அதன் தொடர்ச்சியாக தமது 99ம் வயதில் ஏப்ரல் 9ம் திகதி இளவரசர் பிலிப் காலமானார் எனவும், இதனால் மனக்கசப்பில் இருக்கும் சொந்தங்கள் ஒன்றாக சேர வாய்ப்பு அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்கா திரும்பியுள்ள ஹரி 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ளார். 

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment