Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மகாராஷ்டிரா: சரத்பவாரை சந்தித்த பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் – மீண்டும் ஆபரேசன் தாமரையா?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசியது ஏன் என்பது குறித்து பட்னாவிஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தற்போது எப்போதும் இல்லாத வகையில் இரு வேறு கொள்கையுடைய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. எப்போதுமே சிவசேனா பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே மோதல் போக்கு நிலவியது. அதில் இடையில் புகுந்த சரத்பவார் உத்தவ் தாக்கரேவை, தங்கள் பக்கம் இழுத்து அவரை முதல்வராக்க ஆதரவுக் கொடுத்து ஆட்சியில் அமர்த்தியுள்ளார். அவர்களுடன் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. இது கொள்கையற்ற கூட்டணியாகவே கருதப்படுகிறது. இந்த கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க ஆபரேசன் தாமரை என்ற பெயரில் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு மண்ணைக் கவ்வியது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சரத்பவாரை தங்களது பக்கம் இழுத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்க பா.ஜ.க இதற்கு முன்பு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. தற்போது மீண்டும் சந்தித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு பட்னாவிஸ் விளக்கம் அளித்திருக்கிறார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கொடுத்துள்ள விளக்கத்தில், சரத்பவாருக்கு சமீபத்தில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதனால் அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன், என்று குறிப்பிட்டு இருவரும் சந்தித்த படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத் கூறுகையில், `சரத்பவார் எப்படி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும் என்பது குறித்து, தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆலோசனை கொடுத்திருப்பார்’ என்று தெரிவித்தார். மேலும்,` இந்த சந்திப்பில் எந்த வித அரசியலும் இல்லை. ஆபரேசன் தாமரையை மறந்துவிடுங்கள். அது இங்கேயோ அல்லது மேற்கு வங்கத்திலோ எடுபடாது. அப்படி இருக்கும் போது ஏன் ஒவ்வொரு சந்திப்பையும் அரசியலாக்குகிறீர்கள்’ என்றும் அவர் தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளதையும் சஞ்சய் ராவுத் சுட்டிக்காட்டினார்.

மகாராஷ்டிரா அரசு மராத்தா இன மக்களுக்கு 13 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றி இருந்தது. ஆனால் அதனை சட்டவிரோதம் என்று கூறி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துவிட்டது. அதனால் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மராத்தாக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

அதேசமயம் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னையை மகாராஷ்டிரா அரசு சரியாக கையாளவில்லை என்று கூறி பா.ஜ.க வரும் 5-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்தும் சரத்பவாருடன் பட்னாவிஸ் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment