அனைத்து விதமான அனுமதி பெற்ற பின்னரே மிஷன் சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டது என டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். விண்வெளியில் 300 கிமீ உயரத்தில் சுற்றி வந்த செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும், ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா சமீபத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தியது. இந்த சாதனையின் மூலம், இந்த திறனை பெற்றுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த வரலாற்று சாதனையை கடந்த 27-ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். தொடர்ந்து, விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஷ’மிஷன் சக்திஷ’ எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்தது. செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் விதமான ஏவுகணைகளை தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்காக 100 விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்தனர் என டி.ஆர்.டி.ஓ.வின் தலைவர் கூறியிருந்தார். இதுபற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சமீபத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விண்வெளி கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றினார்கள். ஆனால் பா.ஜ.க. அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில், டெல்லியில் நடந்த மிஷன் சக்தி பற்றிய ஊடக சந்திப்பில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி பேசினார். அப்போது இராணுவ பிரிவில் விண்வெளி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா போன்ற ஒரு நாடு இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு, இலக்கை தாக்கி அளிப்பதில் திறமையினை வெளிப்படுத்தி உள்ளது. பாதுகாப்பதில் சிறந்த வழி என்பது தாக்குதலுக்கு முன்பே தடுப்பது என்பதே ஆகும். மேலும், ப. சிதம்பரத்தின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், செயற்கைக்கோளை வானில் அழித்து தாக்கும் ஏவுகணை பரிசோதனை நடத்தியபின் அதனை ரகசியமுடன் வைத்திருக்க முடியாது. உலகம் முழுவதும் பல நிலையங்களில் செயற்கைக்கோளானது கண்காணிக்கப்பட்டு வந்தது. தேவையான அனைத்து அனுமதிகளும் வாங்கப்பட்டன என்றும் மிஷன் சக்தியின் செயற்கைக்கோள் கழிவுகள் அனைத்தும் இன்னும் 45 நாட்களில் மக்க செய்யப்படும் என டி.ஆர்.டி.ஓ. தலைவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, இந்தியா நடத்திய சோதனையால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 44 சதவீதம் ஆபத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அதிருப்தி தெரிவித்தது. இதுவரை 10 செமீ மற்றும் அதற்கு அதிகமான அளவுள்ள 60 துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 24 துண்டுகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய சுற்றுப்பாதையில் ஆபத்தான வகையில் மிதந்து வருகின்றது என தெரிவித்தது. நாசாவின் விமர்சனத்திற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது.
previous post
Recent posts
10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்
பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..
தமிழரசு கட்சியின் மத்திய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி
இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.
இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, வின்ஹெடோ...
138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
இலங்கைக்கு 3 வது இடம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...