அழகு

மெஹந்தி நீண்ட நாட்கள் கைகளில் இருக்க வேண்டுமா?

கைகளில் வைக்கும் மெஹந்தி நீண்ட நாட்கள் அழியாமல் இருக்க சில ட்ரிக்ஸ் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றி, மெஹந்தி வைத்தால், நிச்சயம் மெஹந்தி நீண்ட நாட்கள் கைகளில் இருக்கும்.

பண்டிகை காலங்களில் பெண்கள் கைகளை அழகுப்படுத்த மெஹந்தி வைப்பார்கள். இவ்வாறு கைகளுக்கு வைக்கும் போது, அவை விரைவிலேயே மங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி பலர், இவ்வாறு கையில் வைக்கும் மெஹந்தி எளிதில் போய்விடுவதால், வெறுத்து அதனை வைப்பதை தவிர்க்கின்றார்கள்.

எனவே இத்தகைய மெஹந்தியை நீண்ட நாட்கள் தக்க வைப்பதற்கு, ஒருசில ட்ரிக்ஸ் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றி, மருதாணியை வைத்தால், நிச்சயம் மருதாணியானது நீண்ட நாட்கள் கைகளில் இருக்கும். இப்போது, அந்த மெஹந்தி/மருதாணியானது நீண்ட நாட்கள் கைகளில் இருப்பதற்கு என்னவெல்லம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

கைகளை நன்கு கழுவவும் மெஹந்தி வைக்கும் முன், கைகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். அதிலும் டோனர் கொண்டு சுத்தம் செய்து மிகவும் சிறந்தது. கெட்டியான மெஹந்தியைப் பயன்படுத்தவும் மெஹந்தி போடும் போது, நன்கு அடர்த்தியான கோடுகளைப் போடுவதால், அவை சருமத்தில் நன்கு ஊடுருவி, நீண்ட நாட்கள் இருக்கும்.

மெஹந்தியை கைகளுக்குப் போட்ட பின்னர், உடனே கழுவாமல், நீண்ட நேரம் வைத்திருந்தால், மெஹந்தியில் உள்ள நிறமானது சருமத்தில் நன்கு ஊடுருவி, நல்ல நிறத்துடன் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும்.

மெஹந்தியை கைகளுக்குப் போட்ட பின்னர், எலுமிச்சை சாற்றில் சர்க்கரையைப் போட்டு சூடேற்றி, குளிர வைத்து, மெஹந்தியானது காய்ந்த பின்னர், அந்த கலவையை பஞ்சு கொண்டு கைகளில் தடவி, 2 மணிநேரம் ஊற வைத்தால், மெஹந்தியானது இன்னும் நல்ல நிறத்துடன் பிடிக்கும்.

மருதாணி போட்ட பின்னர், சிறிது வெஜிடேபிள் ஆயிலை கைகளுக்கு தடவி ஊற வைத்து, பின் கழுவினாலும் நீண்ட நாட்கள் மெஹந்தியானது இருக்கும்.

முக்கியமாக மெஹந்தி போட்டப் பின்னர், 24 மணிநேரத்திற்கு கைகளுக்கு சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. மேற்கூறியவற்றை பின்பற்றினால், நிச்சயம் மெஹந்தியானது நீண்ட நாட்கள் கைகளில் இருக்கும்.

Recent posts

சரியாக இரவில் கூந்தலை பராமரிக்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரலாம்

பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை...
Thamil Paarvai

முகப்பருக்கள் மறைய வேண்டுமா.?

♦ எலுமிச்சைச் சாறு, ரோஜா பன்னீர் சம அளவு எடுத்து அதனை கலந்து முகத்தில் பூசி அரை மணிநேரம் ஊறவைத்து, பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும்....
Thamil Paarvai

முகம் கழுவும் போது இதெல்லாம் செய்யாதீங்க.

முகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தை கழுவுவதன் மூலம் வறட்சியான சருமத்தைப் போக்க முடியும். ஆனால் முகத்தைக் கழுவும் போது...
Thamil Paarvai

அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்.

அருகம்புல் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட புல்வகையைச் சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும்....
Thamil Paarvai

ஆரோக்கியம் மற்றும் அழகைப் பராமரிக்கலாம் வாங்க.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் முதலிடம் வகிப்பது உடல் பருமன். இவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள்...
Thamil Paarvai

ஆப்பிளின் மருத்துவப் பயன்கள்.

👉 ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை. 👉 கலோரிகளில் குறைவானது ஆப்பிள். கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. 👉...
Thamil Paarvai

இயற்கையான முறையில் அழகு குறிப்புகள்.

நகத்தைப் பராமரிக்க : 👰 பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு...
Thamil Paarvai

இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

கோடைகாலத்தில் நமது உடலில் நீர் சத்தானது குறையாமல் இருக்கவும், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாம் அனைவரும் தேடி அருந்தும் பானம் இளநீர் தான். அதிலும் இந்த...
Thamil Paarvai

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டியவை.

இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் சத்தான உணவுகளையும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களையும் உணவாக எடுத்துக்கொள்வதில்லை. மேலும் கடைகளில் விற்கும் குளிர்பானங்களையும், உடலுக்கு கேடு விளைவிக்கும் பானங்களையும்...
Thamil Paarvai

Leave a Comment