மாத ஜோதிடம் ஜோதிடம்

மே மாத ராசி பலன் 2021: மேஷம் ரிஷபம் மிதுனம் ராசிக்கான மே மாத பலன்

மே மாதத்தில் சுக்கிரன், சூரியன் ஆகிய கிரக பெயர்ச்சியும், சனி, புதன் ஆகிய கிரகங்கள் வக்கிர நிலை அடைய உள்ளன. இதன் காரணமாகவும், ஒவ்வொரு ராசியில் அமைந்துள்ள கிரக அமைப்பைப் பொறுத்தும் எப்படிப்பட்ட பலன்களை மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளுக்கு கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

மே மாத கிரக நிலை

மேஷத்தில் சூரியன் சுக்கிரன்

ரிஷப ராசியில் புதன், ராகு

மிதுனத்தில் செவ்வாய்

விருச்சிகத்தில் கேது

மகரத்தில் சனி

கும்பத்தில் அதிசார குரு என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதத்தில் 5ம் தேதி சுக்கிரன் மேஷத்திலிருந்து ரிஷபத்திற்கும்

13ம் தேதி சனி பகவான் வக்கிர நிலை ஆரம்பம்

14ம் தேதி இரவு சூரியன் மேஷத்திலிருந்து, ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இருப்பினும் மே 15ம் தேதி வைகாசி மாதம் ஆரம்பமாகிறது.

மே 20ம் தேதி புதன் வக்கிர பெயர்ச்சி ஆரம்பம்.

சுக்கிர பகவான் மே 29ம் ரிஷப ராசியிலிருந்து மிதுனத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார்.

மேஷ ராசி, லக்கினத்திற்கான மே மாத ராசி பலன் 2021

செவ்வாய் ராசி அதிபதி மேஷ ராசியில் அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரம் 1,2 ஆகிய பாதங்கள் அடங்கியது.

உங்கள் ராசிக்கு பாதகாதிபதி சனி. அசுவினி கேது, பரணி சுக்கிரன், கார்த்திகை சூரியனுக்குரிய நட்சத்திரம்.

ராசி நாதன் செவ்வாய்க்கு பகை வீடான சுக்கிரன் அதிபதியாகக் கொண்ட தைரிய வீரிய ஸ்தானமான மிதுன ராசியில் அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மிதுன ராசிக்கு குருவின் 5ம் அதிசார பார்வை பலன் கிடைப்பதால் நன்மையே ஏற்படும். சிலருக்கு இடமாற்றம், பயண ஏற்படலாம்.

செவ்வாயின் 8ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் விழுவதால், உங்களின் தொழில், வேலையில் எந்த ஒரு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கு 2,7க்கு உடைய சுக்கிரன் உங்கள் ராசியில் மே 5 வரையிலும், அதன் பின்னர் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை, சுகங்கள் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு யோகாதிபதி 5ம் இடத்திற்குரிய சூரியன் மாதத்தின் முதல் பாதியில் உங்கள் ராசியிலும், அதன் பின்னர் 2ம் இடத்திற்கு அமர்ந்து மேன்மையான பலன்களைத் தர உள்ளார். அரசியலில் உள்ளவர்களுக்கு கெளரவமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும்.

10 இருக்கும் சனி ஆட்சி வக்கிரம் ஏற்படுவதால் சிலருக்கு கண் நோய் ஏற்படலாம். விரயங்கள் ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.கணவன் மனைவி உறவில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

பரிகாரம்:

செவ்வாய் மிதுன ராசியில் இருக்கும் போது மாதம் பிறப்பதால், முருகன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திரஷ்ட நாட்கள் :

மே 25, 26, 27 ஆகிய நாட்களில் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். புதிய முயற்சிகள், பயணங்களைத் தவிர்க்கவும். இது மேஷ லக்கினத்திற்கும் பொருந்தும்.

ரிஷப மே மாத ராசி பலன்

மிகப்பெரிய மாற்றங்கள் உங்களுக்கு காத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒருவருடத்திற்குப் பிறகு ராசிக்கு ராசிநாதன் சுக்கிர பகவான் சஞ்சாரம் நிகழ உள்ளது. அதோடு சூரியனும் மாதத்தின் மத்தியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

இதனால் எல்ல கிரக அமைப்பும் நல்ல வலுவானதாகிறது. எப்போது ராசியில் ராசி நாதனும் வலுவானதாக மாறுகிறதோ அப்போது உங்களின் பலம் அதிகரிக்கும். அதனால் உங்களின் செயல்பாடுகள், எண்ணங்களில் வெற்றி பெறும்.

தனவாக்கு, குடும்ப அதிபதி புதன் இந்த மாத தொடக்கத்தில் ராசியில் இருப்பது மேலும் விசேஷமாகும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய காலமாக இருக்கும்.

ரத்தம் சார்ந்த உறவுகள் மூலமும், பிள்ளைகளாலும் மிகவும் உன்னதமான பலன்களை நீங்கள் அடையலாம்.

மாத நடுவில் சூரியன் ரிஷபத்திற்கு வருவதால் உங்களுக்கு அரசு வழியில் உங்களுக்கு நடக்க வேண்டிய செயல் நடக்கும். வீடு மனை சார்ந்த வேலைகள் சிறப்பாக நடக்கும்.

தொழில், உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கி யோகம் தருவதாக இருக்கும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

கலைத் துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம், யோகத்தை எதிர்பார்க்கலாம். அரசு துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டு கிடைக்கலாம்.

மாணவர்கள் சற்று கவனமாக படிக்க வேண்டியது அவசியம்.

மாற்றங்கள் உண்டாகும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் நீங்கள் நினைத்தபடி இருக்கும்.

பரிகாரம்:

அருகில் இருக்கும் நரசிம்மர் ஆலயங்களுக்குச் சென்று வரலாம்.

சந்திராஷ்டம தினம் : 1,2,3, 27, 28, 29, 30

மிதுனம்

உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருக்கிறார். அதே போல குருவின் அதிசார பெயர்வில் 5ம் பார்வை பலன் உங்கள் ராசி மீது விழுவது விசேஷம்.

இதனால் மிகப்பெரிய நற்பலன்களைப் பெற்றிடலாம். உங்கள் ராசி மீது குருவின் பார்வை விழுவதால் அஷ்டம சனி பிரச்னை குறையும். அதே போல ராசியில் இருக்கும் செவ்வாயின் பலம் அதிகரிக்கவும் உதவும்.

ராசிக்கு ஒரு சுப கிரகத்தின் பார்வை கிடைப்பது மிக சிறப்பானது. இந்த மாதம் முழுவதும் குருவின் சுப பார்வை இருக்கும் என்பதால் உங்களுக்குத் தீய கிரக அமைப்பால் ஏற்படக்கூடிய பிரச்னை குறைவதற்கான நல்ல அமைப்பு உள்ளது. அதாவது உங்கள் ராசிக்கு 12ல் இருப்பதால் ஏற்படக்கூடிய உடல் நல பிரச்சினைகள், உடல் வலி போன்றவை தீரும்.

உங்களின் தொழில், வியாபாரம் மிக சிறப்பாக நடக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் புதிய வாய்ப்புகள், ஆர்டர்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய இடத்தில் வேலை, அல்லது இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

உங்களுக்கு இருந்த கஷ்டங்களும், இக்கட்டான நிலை நீங்கும். உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும்.

6ல் கேது அமர்ந்திருந்தாலும் கூட உடல் ஆரோக்கியம் சிறப்பாக தான் இருக்கும். சிறிய அளவிலான உடல் பிரச்சினை தரலாம்.

திருமணம் உள்ளிட்ட சுப காரிய வாய்ப்பை நீங்கள் செய்ய ஏற்றதாகும். திருமண முயற்சி கை கூடும். குழந்தை பாக்கியம் உண்டாக நல் வாய்ப்புள்ளது.

தொழில், வேலை என எது செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும் சூழல் இருக்கும். புதிய தொழில் தொடங்க, புதிய முயற்சி எடுக்க இந்த மாதம் உங்களுக்கு நன்மை தரும்.

சந்திராஷ்டம நாட்கள் ;

மே மாதம் 2, 3, 4, 5, 29, 30, 31

Recent posts

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுக்கூடிய தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புத்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. பலம்...
Thamil Paarvai

இருவிதமான திருமண தோஷங்கள்

திருமணம் பார்க்கும்போது இருவிதமான தோஷங்கள் மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ளது. அவைகள்1.செவ்வாய் தோஷம்2.ராகு-கேது தோஷம் செவ்வாய் தோஷம் : செவ்வாய் தோஷம் என்னவென்பதை அறிந்து கொண்டால் அதற்கு...
Thamil Paarvai

திருமணமும், ஜாதகமும்…!!

திருமணம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும், அதில் நடைபெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றியும், நாம் இதுவரை விரிவாக பார்த்தோம். இனி திருமணத்தில் மணமக்களின் ஜாதகத்தின் முக்கியத்துவம் யாது...
Thamil Paarvai

நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய இலக்கை அடையும் திறமை கொண்ட மகர ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது மகர ராசி அன்பர்களுக்கு மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், நுட்பமான செயல்பாடுகளின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய ஒரு சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும் காலமாக அமையும்....
Thamil Paarvai

சவாலான செயல்களையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட மீன ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது மீன ராசி அன்பர்களுக்கு தோற்றப்பொலிவில் புதிய மாற்றத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். குடும்ப விவரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக் கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள்...
Thamil Paarvai

கனிவான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்ட கன்னி ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கன்னி ராசி அன்பர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகளின் மூலமும், புதுமையான வியூகங்களின் மூலமும் திறமைகளை வெளிப்படுத்தி தங்களுக்கென புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாக்கு...
Thamil Paarvai

பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கும்ப ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கும்ப ராசி அன்பர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதன் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களை...
Thamil Paarvai

எதற்கும் கலங்காத நெஞ்சமும்… எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கடக ராசி அன்பர்களுக்கு புதுவிதமான அனுபவங்களை உருவாக்கக்கூடிய காலக்கட்டங்களாக அமையும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான தனவரவுகளை பெறுவீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்திருந்த சில...
Thamil Paarvai

எப்பொழுதும் குறிக்கோளுடன் செயல்படக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது விருச்சிக ராசி அன்பர்களுக்கு எண்ணங்களில் புத்துணர்ச்சியையும், செயல்பாடுகளில் துரிதத்தையும் உருவாக்கும். பேச்சுக்களில் பொறுமையை கையாளுவது நல்லது. சில நேரங்களில் பேச்சுக்களில் அதிகாரத்தன்மை அதிகரிக்கும். பொருளாதாரம்...
Thamil Paarvai

Leave a Comment