இளைஞரை வழிமறித்த கும்பல் அவரைத் தாக்கியதுடன், அவரது உந்துருளியையும் அபகரித்துச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
அயல்வீட்டிலிருந்து திருடர்கள் எனக் கேட்ட உதவிக்குரல் கேட்டு ஓடிச் சென்ற இளைஞனுக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுவில் கிழக்கில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் திருடர்கள் உடனே வருமாறு கிடைத்த அலைபேசி அழைப்புடன் ஓடிச் சென்ற 25 வயது இளைஞரே தாக்குதலுக்கு உள்ளானார்.