ஆன்மீகம் இஸ்லாம்

ரமலான் பண்டிகையின் சிறப்புகள்

ரமலான் மாதம் எத்தகைய சிறப்புள்ளது என்று மனிதர்கள் விளங்கி விடுவார்களானால் ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள்.

புனித ரமலான் மாதம் முஸ்லிம்களுக்காக அல்லாஹூ தஆலாவினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதியாகும். ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது. ரமலான் மாதம் எத்தகைய சிறப்புள்ளது என்று மனிதர்கள் விளங்கி விடுவார்களானால் ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள், ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம் என்று மக்கள் விளங்குகின்றனர்.

ஆனால் புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளைக் கருதி மனிதர்கள் அதனை விரும்புவார்கள் என்பதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அருளுகிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைப்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும், மனோ ஊசலாட்டங்களையும் நீக்கி விடும் என ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும் பலன்களும் இருக்கின்றன. மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப் பதில் பலவிதமான பலன்கள் மனிதனுக்கு கிடைக்க வேண்டு மென்பதுதான் நோக் கம், அவை அனைத்தும் கொஞ்சம் பசித்திருக்கும் பொழுதுதான் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றில் மிகப்பெரிய பலனாகிய மனோ இச்சையை முறியடித்தல் என்பது சிறிது நேரம் பசித்திருப்பதில்தான் அடங்கியிருக்கிறது.

சைத்தான் மனிதனின் உடலில் ரத்தம் போன்று ஊடுருவி சென்று கொண் டிருக்கிறான். அவனுடைய வழிகளை பசித்திருப்பதின் மூலம் தடை செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். அனைத்து உறுப்புகளின் திருப்தி நஃப்ஸின் பசியில் அடங்கி யுள்ளது. ஏனெனில் நஃப்ஸ் பசித்திருந்தால், உறுப்புகள் அனைத்தும் திருப்தியுற்று அமைதி பெறுகின்றன.

நஃப்ஸ் திருப்தியடைந்தால் இதர உறுப்புகளுக்கு பசியெடுத்து விடுகிறது. (பாவங்கள் செய்ய துடிக்கின்றன)நோன்பி னால் மற்றொரு பலன் என்ன வென்றால் ஏழைகளைபோல் பசித்திருந்து அவர்களுடைய நிலைகளை உணர்வதாகும். இந்த நோக்கம் மாலை வரை பசி தெரியாமல் இருக்க ஸஹர் நேரத்தில் பால், இனிப்பு வகைகள், ஆகா ரங்கள் ஆகியவற்றை கொண்டு குடலை நிரப்பாமல் இருப்பதில்தான் உண்டாக முடியும். ஏழைகளுக்கு ஒப்பாக இருத்தல் என்பது கொஞ்சநேரம் பசித்திருப்பதின் மூலம்தான் சாத்தியமாகும்.

வயிற்றை நிரப்புவது போன்று வேறு எந்தப் பாத்திரத்தையும் நிரப்புவது அல்லாஹூ தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளி யுள்ளார்கள். மேலும் அல்லாஹூ தஆலா புனித ரமலான் மாதத்தில் அர்ஷைச்சுமக்கும் மலக்குகளிடம் உங்களுடைய வணக்கங்களை விட்டுவிட்டு நோன்பாளிகளின் துஆக்க ளுக்கு ஆமின் கூறிக் கொண்டிருங்கள் என்பதாக கூறுகிறார் என ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் கேட்கப்படும் துஆக்கள் விசேஷமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது பல அதீஸ்களின் மூலம் விளங்குகிறது. அல்லாஹூ தஆலாவின் வாக்கும், ரஸூ லுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் உண்மையான அறிவிப்பும் இருக்கும் பொழுது துஆ ஏற்கப் படுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆகவே இந்த புனிதமான ரமலான் மாதத்தின் பர்க்கத்தை கொண்டு நாம் நோற்ற இந்த நோன்பினையும், கொடுத்த ஜகாத்தினையும், செய்த அனைத்து இபாதத்துகளையும், நன்மையான காரியங்களை ஏற்று முழுமையான கூலியை நம் அனைவருக்கும் கொடுத்து அருள்வாராக. ஆமின்.

Recent posts

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு கூற்றுக்கள் இவை தான் (இங்கே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இவை கொடுக்கப்படவில்லை): (1) மத்தேயு 27:46 கூறுகையில், ஒன்பதாம் மணி...
Thamil Paarvai

சிலுவையில்இயேசுகூறியஏழுஉபதேசங்கள்

முன்னுரை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளை இங்கு உபதேசங்களாக உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்க விரும்புகிறேன். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு கருத்தை...
Thamil Paarvai

புனித வெள்ளி என்ற பெயர் வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

கிறிஸ்தவர்களால் அனுஸ்டிக்கப்படும் ஒரு புனித நாளாக இந்த புனித வெள்ளி எனும் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது. இது பொதுவாக கத்தோலிக்க மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இயேசுபிரான் உயிர்...
Thamil Paarvai

இயேசு ராஜாவாக வருகிறார்

எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகிறார். தம்முடைய சீஷரில் இருவரிடம், நீங்கள் கிராமத்துக்குள் போங்கள், அங்கே ஒரு கழுதைக்குட்டியைப் பார்ப்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம்...
Thamil Paarvai

முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள்..

🦚 முருகப்பெருமானின் அருளை பெற்றுத்தரும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம்தான் தை மாதம். தை மாதத்தில் பௌர்ணமியன்று பூசம்...
Thamil Paarvai

தைப்பூசத்திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்”

தைப்பூசத்தின் சிறப்புகள் பூச நட்சத்திர நாள் முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும். இந்நாளில் தான் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கினார்....
Thamil Paarvai

கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

1. கோயிலில் தூங்கக் கூடாது.2. தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.3. கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.4. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக்...
Thamil Paarvai

வரவிருக்கிறது கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்.

கிருஷ்ணஜெயந்தி…!!  ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராண கதை உண்டு. அதுபோலவே கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. கோகுலாஷ்டமி குழந்தை கிருஷ்ணனின் புகழை சொல்லக்கூடியது.  தசாவதாரத்தில் ஓர் அவதாரம்...
Thamil Paarvai

நாளை சிறப்புமிகு ஆனி உத்திரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் மிகவும் அற்புதமான திருமேனி நடராஜர் திருவுருவம். நடராஜ பெருமானின் திருவுருவில் பஞ்சபூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம், அண்ட சராசரங்கள்,...
Thamil Paarvai

Leave a Comment