நடிகர் சூர்யா நடிப்பில் படம் வெளியாகி ஓராண்டை கடந்துவிட்டது. தற்போது, அவர் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். ஒன்று செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகி உள்ள என்ஜிகே, மற்றொன்று கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள காப்பான். இப்படம் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.
இந்தப்படங்களை தொடர்ந்து, இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்கிறார் சூர்யா. இன்னும் பெயரிடப்படாத இப்படம் சூர்யாவின் 38வது படமாக உருவாகிறது. சூர்யாவே தயாரிக்கிறார், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை.
இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் சூர்யா, சுதா, தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் ராஜஸ்தானின் புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தனர்.