கிரிக்கெட் விளையாட்டு

ரோகித் சர்மாவுக்கு ‘ரெஸ்ட்’ * ஆஸி., தொடருக்கான அணியில்… | பெப்ரவரி 12, 2019

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 15ம் தேதி அறிவிக்கப்படுகிறது. ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்படும் எனத் தெரிகிறது.

இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணித் தேர்வு வரும் 15ம் தேதி நடக்கவுள்ளது. உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச தொடர் என்றாலும், முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரும் திட்டமும் உள்ளது.

இதற்கு முன் நியூசிலாந்து தொடரில் கோஹ்லி, முகமது ஷமிக்கு சில போட்டிகளில் ஓய்வு தரப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் ஓய்வில் தான் உள்ளார்.

இதுகுறித்து இந்திய அணி தரப்பில் வெளியான செய்தி:

இந்திய ‘சீனியர்’ வீரர்களின் பணிச்சுமை குறித்து தேர்வுக்குழு கூட்டத்தில்  விவாதிக்கப்படும். போட்டிகள் மற்றும் தொடருக்கு இடையே போதிய ஓய்வு தர வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் தான் நியூசிலாந்து தொடரில் கோஹ்லிக்கு ஐந்து போட்டிகளில் ஓய்வு தரப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க உள்ள ‘டுவென்டி–20’ தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு தரப்படலாம். ஒருநாள் தொடருக்கான அணியில் சோதனை முயற்சிகள் செய்ய வாய்ப்பு இல்லை. உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்புக்கு வழி ஏற்படுத்தி, அவர்கள் எழுச்சி பெற்றுவிடாமலும் பார்த்துக் கொள்ளப்படும்.

இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தன்னம்பிக்கையுடன் களமிறங்கும். இதனால் ஓய்வு என்ற பெயரில் அணிக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்வோம்.

யார் கீப்பர்?

தற்போதைய நிலையில், இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்துக்கு தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட் இடையே ஆரோக்கியமான போட்டி காணப்படுகிறது. கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு துவக்க வீரர் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்ப வாய்ப்பு உண்டு. பும்ரா, புவனேஷ்வர், முகமது ஷமி, கலீல் உள்ளிட்ட நான்கு வேகப்பந்துவீச்சாளர்களும் நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். இவர்களுக்கு ஓய்வு தர வேண்டிய அவசியமில்லை. சுழற்சி முறையில் பயன்படுத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அட்டவணை

இரண்டு ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் போட்டிகள் அட்டவணை

தேதி                   போட்டி                                  இடம்

பிப். 24          முதல் ‘டுவென்டி–20’             விசாகப்பட்டனம்

பிப். 27          2வது ‘டுவென்டி–20’            பெங்களூரு

மார்ச் 2  முதல் ஒருநாள்                     ஐதராபாத்

மார்ச் 5         2வது ஒருநாள்                             நாக்பூர்

மார்ச் 8         3வது ஒருநாள்                             ராஞ்சி

மார்ச் 10 4வது ஒருநாள்                             சண்டிகர்

மார்ச் 13 5வது ஒருநாள்                            டில்லி

* ‘டுவென்டி–20’ போட்டிகள் இரவு 7:00 மணி, ஒருநாள் போட்டிகள் மதியம் 1:30 மணிக்கும் துவங்கும்.

Recent posts

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு – வில்லியம்சன்

கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி...
Thamil Paarvai

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும்...
Thamil Paarvai

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற ஏபி டி வில்லியர்ஸ் மறுப்பு: தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் வாரியம்

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு...
Thamil Paarvai

Leave a Comment