லண்டனில் குடியிருக்கும் கனேடியர்களை மிகுந்த அவதானதுடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிரெக்ஸிற் தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்காரணமாக தமது நாட்டு பிரஜைகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கனேடிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆர்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், இதன்காரணமாக குறிப்பிட்ட பகுதிகளை கனேடியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே முன்வைத்த உடன்படிக்கையானது மூன்றாவது முறையாகவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரெக்ஸிற் போராட்டமானது மேலும் பல நாட்கள் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.