Featured ஆன்மீகம் இலங்கை கிறிஸ்தவம் செய்திகள் புதிய செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களான இரு அருட்தந்தையர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

குறி்த்த உத்தரவானது கடந்த 01ஆம் திகதி (01.07.2024) பிறப்பிக்கப்பட்டது.

குறித்த ஆயர் இல்லத்தில் கடந்த ஏப்ரல் 2ம் திகதி ஆயர் தலைமையில் வணபிதாக்களின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது அந்த கலந்துரையாடலை திருட்டுத்தனமாக வீடியோ பதிவு செய்து அதனை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக அவர்ளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆயர் இல்லத்தினால் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சம்பவத்தின் போது வீடியோ பதிவு செய்து அதளை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர் என சந்தேகத்தின்பேரில் இரு அருட்தந்தையர்களிற்கு எதிராக கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் சந்தேகநபர்களான இரு அருட்தந்தையர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்றை பிறப்பித்து கட்டளையிட்டார்.

கத்தோலிக்க திருச்சபையில் தங்களது உள்ளக விவகாரங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆயர் தலைமையில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும்.

நீண்ட காலமாக உலக நாடுகளிலும் இலங்கையிலும் இந்த மரபுகளே பேணப்பட்டு வந்தன.

எனினும்,  வரலாற்றில் முதன் முறையாக ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இது போன்ற விடயங்களுக்கான முதன்முறையாக அருட்தந்தையர்களை விசாரணைக்குட்படுத்துவதும் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent posts

🌿 ஒரு புதிய ஆன்மீக பயணத்திற்கான தொடக்கம் 🌿

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நமக்கு தியாகம், கருணை, மன்னிப்பு, மற்றும் புதிய தொடக்கத்தை கற்றுக்கொடுக்கிறது. விபுதி புதன் (Ash Wednesday) என்பது அந்த ஆன்மீகப் பயணத்தின் முதல்...
Thamil Paarvai

செல்வங்கள் பெருக… 

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்ட ஒன்று பணம். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம்...
Thamil Paarvai

ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?…

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது...
Thamil Paarvai

சபரிமலைஐயப்பன் கோவிலின் ஆன்மிக வழிபாட்டு முறைகள் .

🛕 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இக்கோவிலில் பல விதமான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. 🕉️ முக்கிய பூஜைகள்: 🌅உஷத் கால...
Thamil Paarvai

ஐயப்பன் கோவிலில் தேங்காய் வழிபாடு எதற்காக?

🙏 ஐயப்பன் கோவிலில் இந்த சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது..! 🙏 🛕 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது,...
Thamil Paarvai

அமைச்சர் அடுத்து என்ன செய்வது? ஐயப்பன் வரலாறு

👨‍⚖️ அமைச்சர் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த கணத்தில் அவர் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு சம்பவம் அவருக்கு சாதகமாக அமைந்தது. 🗣️ அதாவது மணிகண்டன் தனது...
Thamil Paarvai

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

Leave a Comment