தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த நடிகை ஒருவருக்கு தற்போது வாய்ப்பு ஏதும் இல்லாத நிலையிலும், வருத்தப்படாமல் பட வாய்ப்பை பெறுவது குறித்த ஆலோசனையில் இறங்கியிருக்கிறாராம்.
சங்கத்தை மையமாக வைத்து உருவான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நான்கெழுத்து நடிகைக்கு கைவசம் தற்போது படங்கள் இல்லையாம். பட உலகில் தனது மார்க்கெட்டை இழந்தாலும் அதற்காக நாயகி வருத்தப்படவில்லையாம்.
புதிய பட வாய்ப்புகளை பிடிப்பது எப்படி? என்பது குறித்து தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினாராம். அவர்களது ஆலோசனைப்படி அந்த தனது சம்பளத்தை பட வாய்ப்புகளுக்கு ஏற்ப கூட்டி, குறைக்க நாயகி முடிவு செய்திருக்கிறாராம்.
பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தால், தனது லட்சத்தில் சம்பளம் வாங்கிக் கொள்ளலாம் என்றும், புதுமுக கதாநாயகர்களுடன் ஜோடி சேர கோடியில் சம்பளம் கேட்பதென்றும் அவர் முடிவெடுத்து இருக்கிறாராம்.