பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் வாழ்க்கை கதையை ரகசியமாக புத்தகம் எழுதிய நிலையில், அதனை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை எதிர்த்து ஏதாவது ஒன்றை செய்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன் வாழ்க்கையில் நடந்தவற்றை புத்தகமாக எழுதியுள்ளதுடன் அதனை வரும் 2022 ஆம் வருட கடைசியில் வெளியிடவுள்ளதாகவும் ஒரு விநியோகஸ்தரிடம் நல்ல விலைக்கு அதனை விற்பனையும் செய்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர், தன் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை எழுதி வெளியிடுவது இது தான் முதல் தடவை. புத்தகத்தை வெளியிடும் நிறுவனமான Penguin Random House, இந்த தகவலை தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இளவரசர் ஹாரி முதல் தடவையாக தன் அனுபவங்கள், இழப்புகள் என்று தன் வாழ்க்கை முழுவதையும் சுயசரிதை எழுதியிருக்கிறார் என கூறியுள்ளது.
மேலும் தற்போது அரச குடும்பத்துடன் தனக்கு ஏற்பட்ட பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் ஹாரி ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு ஒரு புத்தகத்தை அவர் வெளியிடுகிறார்.
இவ்வாறான நிலையில் அப்போது எப்படி உறவுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை சரி செய்வார்? என்று அரசு குடும்பத்தின் நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.