கனடா செய்திகள் புதிய செய்திகள்

விசாரணையில் அதிரடி திருப்பம்….கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்:

கனடாவில் 20 வார கர்ப்பிணி மனைவிக்கு போதை மருந்து தந்து கொலை செய்த வழக்கில் விசாரணை அடுத்த கட்டத்தில் எட்டியுள்ளது.

கனடாவில் கிறிஸ்தவ மத போதகராக செயல்பட்டு வந்தவர் பிலிப் கிராண்டின். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தமது மனைவி அன்னா கரிசா கிராண்டின்(29) குளியலறையில் மரணமடைந்து கிடப்பதாக கூறி 911 எண்ணுக்கு அழைத்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர் குறித்த பெண்மணியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் அன்னா கரிசாவின் உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதில், அன்னா கரிசா மரணமடைவதற்கு முன்னர் மூன்று நாட்களாக தொடர்ந்து அவருக்கு Lorazepam என்ற மருந்து தரப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகமடைந்த பொலிசார் பிலிப் கிராண்டினை விசாரணைக்கு அழைத்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தமக்கு இன்னொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதையும், அதனால் தமது மனைவி அன்னாவின் உடலை செயலிழக்க செய்து முடக்க முடிவு செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையிலேயே அன்னா கரிசா குளியலறையில் மரணமடைந்த நிலையில் மீட்க்கப்பட்டார்.

ஆனால் இந்த வழக்கில் பிலிப் கிராண்டின் திட்டமிட்டு தமது மனைவியை கொலை செய்துள்ளதாக நிரூபணமாகாத நிலையில்,

அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் செவ்வாய் அன்று நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment