![](https://paarvaionline.com/wp-content/uploads/2021/01/Embassy_of_Sri_Lanka-Washington.jpg)
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக ஜனவரி 10ஆம் திகதி வரை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது.
தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவசர தேவைகளுக்காக பின்வரும் முறையினூடாக தொடர்புகொள்ளுமாறு தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி – அவசர சேவைகளுக்கு: slembassy@slembassyusa.org
தூதரக விடயங்கள் : consularofficer@slembassyusa.org (மின்னஞ்சல்)
தூதரக தொலைபேசி எண் : (202) 580 9546 போன்ற வழிகளில் தொடர்பு கொள்ள முடியும்.
இதேவேளை அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.