![](https://paarvaionline.com/wp-content/uploads/2020/12/115864241_gettyimages-1229855242.jpg)
வேளாண் சட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் எதிர்க் கட்சி தலைவர்கள் 5 பேர் சந்தித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 14-வது நாளாக நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டத்தில் வருகின்றனர்.
![](https://paarvaionline.com/wp-content/uploads/2020/12/in.jpg)
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர். புராரி மைதானம் மற்றும் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26-ந் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டெல்லி முடங்கி வருகிறது. அரியானா, உத்தரபிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளை விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், இந்த சாலைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், விவசாய குழுக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ராகுல்காந்தி, சரத்பவார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளனர். டெல்லியில் 15-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் எதிர்க் கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.