2019 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியிலேயே நாட்டில் துரித ஏற்றுமதி பொருளாதாரம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான வழிமுறைகளை செயற்படுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கடன்களையும் செலுத்தி முடிக்கக் கூடிய சாத்தியம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகலை பிரதேசத்தில் நேற்று (வௌ்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவல் வௌியிட்டார்.
இலங்கையில் இதுவரை காலமும் வௌிநாடுகளின் முதலீடுகள் மற்றும் கடன்களைக் கொண்டே பொருளாதார கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.
எனவே. இந்த வருடத்துடன் சுய முயற்சியுடன் நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் சுட்டிக்காட்டினார்.