உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

800 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம் பார்க்க தவறாதீர்கள்

800 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரிய வாய்ப்பிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய இரண்டு கிரகங்களான வியாழன் மற்றும் சனியை பூமியிலிருந்து பார்க்கும்போது, இந்த இரண்டு கிரகங்களும் அருகருகே வரும்போது பெரிய நட்சத்திரத்தை போல ஒளிரும். இந்த வெளிச்சமே கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே

வியாழன் மற்றும் சனி கோள்களின் சந்திப்பு ஒவ்வொரு 20 வருடத்துக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் 800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தெரியும்.

இரண்டு கோள்களும் நெருங்கி வரும் என்ற போதிலும் அவை இரண்டிற்கும் மில்லியன் மைல்கணக்கில் இடைவெளி இருக்கும். இவை இரண்டும் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை அருகில் வருகின்றது. கடைசியாக 1226ஆம் ஆண்டு இந்த அரிய நிகழ்வை பூமியில் இருந்து காண முடிந்தது. அதற்கு அடுத்த 400 வருடங்கள் கழித்து 1623ஆம் ஆண்டு நெருங்கி வந்தபோது பூமியில் இருந்து இந்த நிகழ்வை காண முடியவில்லை. இதனால் 800 ஆண்டுகள் கழித்து தற்போது இந்நிகழ்வு தெரிய இருக்கிறது.

டிசம்பர் 21ஆம் தேதி

கடைசியாக கிறிஸ்துமஸ் நட்சத்திரம் 1226ஆம் ஆண்டு தோன்றியது. அதன்பின் இந்த நிகழ்வு வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஏற்பட உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய நாள் இந்த வருடத்தின் நீண்ட இரவாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.

இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வரும் 20ஆம் தேதி சூரிய மறைவுக்கு பின் தோன்றி 22ஆம் தேதி வரை தெரியும். ஆனால், 21ஆம் தேதி இரவு தான் மிக தெளிவாக, பிரகாசமாக தெரியும்.

பார்க்க தவறாதீர்கள்

இந்த நட்சத்திரத்தை உலகின் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் மற்றும் டெலெஸ்கோப் கருவியை கொண்டு பார்க்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

800 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த அரிய நிகழ்வை கண்டுகளிக்க வானியல் ஆர்வலர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர்.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment