உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

800 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம் பார்க்க தவறாதீர்கள்

800 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரிய வாய்ப்பிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய இரண்டு கிரகங்களான வியாழன் மற்றும் சனியை பூமியிலிருந்து பார்க்கும்போது, இந்த இரண்டு கிரகங்களும் அருகருகே வரும்போது பெரிய நட்சத்திரத்தை போல ஒளிரும். இந்த வெளிச்சமே கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே

வியாழன் மற்றும் சனி கோள்களின் சந்திப்பு ஒவ்வொரு 20 வருடத்துக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் 800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தெரியும்.

இரண்டு கோள்களும் நெருங்கி வரும் என்ற போதிலும் அவை இரண்டிற்கும் மில்லியன் மைல்கணக்கில் இடைவெளி இருக்கும். இவை இரண்டும் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை அருகில் வருகின்றது. கடைசியாக 1226ஆம் ஆண்டு இந்த அரிய நிகழ்வை பூமியில் இருந்து காண முடிந்தது. அதற்கு அடுத்த 400 வருடங்கள் கழித்து 1623ஆம் ஆண்டு நெருங்கி வந்தபோது பூமியில் இருந்து இந்த நிகழ்வை காண முடியவில்லை. இதனால் 800 ஆண்டுகள் கழித்து தற்போது இந்நிகழ்வு தெரிய இருக்கிறது.

டிசம்பர் 21ஆம் தேதி

கடைசியாக கிறிஸ்துமஸ் நட்சத்திரம் 1226ஆம் ஆண்டு தோன்றியது. அதன்பின் இந்த நிகழ்வு வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஏற்பட உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய நாள் இந்த வருடத்தின் நீண்ட இரவாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.

இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வரும் 20ஆம் தேதி சூரிய மறைவுக்கு பின் தோன்றி 22ஆம் தேதி வரை தெரியும். ஆனால், 21ஆம் தேதி இரவு தான் மிக தெளிவாக, பிரகாசமாக தெரியும்.

பார்க்க தவறாதீர்கள்

இந்த நட்சத்திரத்தை உலகின் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் மற்றும் டெலெஸ்கோப் கருவியை கொண்டு பார்க்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

800 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த அரிய நிகழ்வை கண்டுகளிக்க வானியல் ஆர்வலர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment