தோல்விக்கு காரணமும் கிரகங்களே!ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுக்கூடிய தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புத்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. பலம் குறைந்த நீச்ச கிரக சேர்க்கை பெற்ற ராகு-கேது திசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும். தடைகள் என அனைவராலும் கருதப்படுவது, தன்னுடைய குழந்தைகளுக்கு எதிர் காலத்தை நிர்ணயக்கூடிய கல்வியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை குறிப்பதாகும்.
![](https://paarvaionline.com/wp-content/uploads/2024/03/hjk.jpg)
கல்வியில் தடை :புதன் நீச்சமாகியோ, 6,8,12ல் மறைந்தோ திசை அமைவதும், மேலும் லக்னம், 5,7,8-ம் இடங்களில் சந்திரன்-சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் திசாபுத்திகளால் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு கவனம் தடுமாறும்.சுக ஸ்தானத்தின் அதிபதியான 4ஆம் அதிபதியுடன் நீச்ச கிரகத்தின் சேர்க்கை பெற்ற திசாபுத்திகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டுவதன் கல்வி தடை ஏற்படலாம்.சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை, நீச்ச கிரக திசாபுத்திகள், ராகு-கேதுக்கள் ராசிக்கு 2,4,7,8,10 போன்ற ஸ்தானங்களில் வருவது, சனிப்பெயர்ச்சி காரணமாக 4ல் சனி, ஏழரை சனி, அஷ;டமச்சனி நடப்பது ஆகியவையும் கல்விக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றன.இத்தகைய கிரக நிலைகள் அமையும்போது, மேலும் அதிக சிரமப்பட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.அதிக மறதி :6,8,12 ஆகிய கிரக திசைகள் அமைவது.திடீர் தடைகள் :8ஆம் அதிபதி மற்றும் 4ஆம் அதிபதியுடனும், சனி, செவ்வாயுடனும் சேர்க்கை பெற்று திசை அமைவது.வழிபாடு, பரிகாரங்கள் :ஹயக்ரீவ தலங்கள் சென்று வழிபட்டால் கல்வித் தடைகள் நீங்கும். புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேரும் தினத்தில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். திருக்கடையூர் அபிராமி அம்மனை தரிசித்து பிரார்த்திக்கலாம்.தினமும் காலையில் விநாயகர் அகவல் படித்தால், நினைவாற்றல் அதிகரிக்கும்.ஞானத்தையும், பல்வேறு கலை, கல்விகளில் தேர்ச்சியையும், அறிவாற்றலையும் அருளும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று வணங்கலாம்.திருவொற்றியூரில் ஞான சக்தியாக அருளும் வடிவுடையம்மனை பவுர்ணமி அன்று தரிசித்து வழிபடலாம். கல்வி, வித்தை அருளும் புதன் பகவானை வணங்கலாம். கல்விக் கடவுளாம் சரஸ்வதியை வணங்குவது நல்ல பலன் தரும்.