ஆன்மீகம் கிறிஸ்தவம்

இயேசு ராஜாவாக வருகிறார்

எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகிறார். தம்முடைய சீஷரில் இருவரிடம், நீங்கள் கிராமத்துக்குள் போங்கள், அங்கே ஒரு கழுதைக்குட்டியைப் பார்ப்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார். அந்தக் கழுதைக்குட்டி கொண்டு வரப்பட்டபோது, இயேசு அதன் மேல் உட்காருகிறார்.

பிறகு, கொஞ்ச தூரத்தில் இருக்கிற எருசலேமுக்குச் சவாரி செய்கிறார். அந்த நகரத்துக்கு அருகில் வந்தபோது ஒரு பெரிய கூட்டமே அவரைப் பார்க்க வந்துவிடுகிறது. அப்போது ஜனங்கள் தங்களுடைய மேலங்கிகளை எடுத்து அவர் வருகிற வழியில் விரிக்கிறார்கள்.

மற்றவர்கள் ஓலைகளை வெட்டி அங்கே போடுகிறார்கள், அப்படிப் போட்டுவிட்டு யெகோவாவின் பெயரில் வருகிற இந்த ராஜாவை கடவுள் ஆசீர்வதிப்பாராக! என்று ஆர்ப்பரிக்கிறார்கள். மக்கள் இயேசுவை வரவேற்கிறார்கள். அந்தக் காலத்தில், இஸ்ரவேலின் புதிய ராஜாக்கள் தங்களை ஜனங்களிடம் காண்பிப்பதற்காக கழுதைக்குட்டியின் மேல் எருசலேமுக்குள் சவாரி செய்வார்கள். இதைத்தான் இயேசு செய்து கொண்டிருக்கிறார். இயேசு தங்களுடைய ராஜாவாயிருக்க விரும்புவதை இந்த ஜனங்கள் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே அவரை விரும்பவில்லை. நமக்கு எப்படித் தெரியும்? ஆலயத்தில் நடந்த சம்பவத்திலிருந்து இதை நாம் தெரிந்துகொள்ளலாம். ஆலயத்தில் குருடரையும் முடவரையும் இயேசு சுகப்படுத்துகிறார். இதைப் பார்த்த சிறு பிள்ளைகள் இயேசுவைப் புகழ்ந்து ஆரவாரம் செய்கிறார்கள்.

ஆனால் அந்த ஆசாரியர்களுக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது, அவர்கள் இயேசுவிடம், இந்தப் பிள்ளைகள் சொல்வதெல்லாம் உம் காதில் விழுகிறதா? என்று கேட்கிறார்கள். ஆம், என் காதில் விழுகிறது, சிறு பிள்ளைகளுடைய வாயிலிருந்து கடவுள் துதி உண்டாகச் செய்வார் என்று பைபிளில் சொல்லியிருப்பதை நீங்கள் ஒருநாளும் வாசிக்கவில்லையா? என்று இயேசு பதிலுக்கு கேட்கிறார். அதனால் அந்தப் பிள்ளைகள் விடாமல் கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவைத் துதிக்கிறார்கள்.

இந்தப் பிள்ளைகளைப் போல் இருக்க நாம் ஆசைப்படுகிறோம் இல்லையா? கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்லி சில ஆட்கள் நம்மைத் தடுக்கலாம். ஆனாலும், இயேசு செய்யப் போகிற அதிசயமான காரியங்களைப் பற்றி நாம் தொடர்ந்து ஜனங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்போம். இயேசு பூமியில் இருந்தபோதே ராஜாவாக ஆட்சி செய்ய தொடங்கிவிட்டாரா? இல்லை. அப்படியானால், அவர் ஆட்சி செய்யப் போகிற அந்தக் காலம் எப்போது வரும்? இயேசுவின் சீஷர்கள் அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

Recent posts

சபரிமலைஐயப்பன் கோவிலின் ஆன்மிக வழிபாட்டு முறைகள் .

🛕 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இக்கோவிலில் பல விதமான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. 🕉️ முக்கிய பூஜைகள்: 🌅உஷத் கால...
Thamil Paarvai

ஐயப்பன் கோவிலில் தேங்காய் வழிபாடு எதற்காக?

🙏 ஐயப்பன் கோவிலில் இந்த சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது..! 🙏 🛕 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது,...
Thamil Paarvai

அமைச்சர் அடுத்து என்ன செய்வது? ஐயப்பன் வரலாறு

👨‍⚖️ அமைச்சர் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த கணத்தில் அவர் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு சம்பவம் அவருக்கு சாதகமாக அமைந்தது. 🗣️ அதாவது மணிகண்டன் தனது...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு கூற்றுக்கள் இவை தான் (இங்கே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இவை கொடுக்கப்படவில்லை): (1) மத்தேயு 27:46 கூறுகையில், ஒன்பதாம் மணி...
Thamil Paarvai

சிலுவையில்இயேசுகூறியஏழுஉபதேசங்கள்

முன்னுரை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளை இங்கு உபதேசங்களாக உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்க விரும்புகிறேன். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு கருத்தை...
Thamil Paarvai

புனித வெள்ளி என்ற பெயர் வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

கிறிஸ்தவர்களால் அனுஸ்டிக்கப்படும் ஒரு புனித நாளாக இந்த புனித வெள்ளி எனும் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது. இது பொதுவாக கத்தோலிக்க மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இயேசுபிரான் உயிர்...
Thamil Paarvai

முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள்..

🦚 முருகப்பெருமானின் அருளை பெற்றுத்தரும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம்தான் தை மாதம். தை மாதத்தில் பௌர்ணமியன்று பூசம்...
Thamil Paarvai

Leave a Comment