
கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர மேயர் சொராயா மாரிடென்ஸ் இந்த செய்தியை வியாழக்கிழமை காலை உணர்ச்சியுடன் அறிவித்தார்.
இன்று காலை இரண்டு வீடற்ற முதியவர்கள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களை நீண்ட காலமாக அறிந்திருந்த அமைப்புகள் இன்று துயரத்தில் உள்ளன.
இந்த மரணங்கள் குறித்து மேலும் விவரங்களை வெளியிட முடியாது என்றும், இத்தகைய துயரமான சூழலில் வீடற்றோர் பிரச்சினை குறித்து அறிவிப்பு வெளியிடுவது மிகவும் கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், இந்த சம்பவம் வீடற்றோர் பிரச்சினையை தீர்க்கும் அவசியத்தை வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
“நம்மிடம் உயிர்களை காப்பாற்றும் வளங்கள் இருந்தும், மனிதர்களை இழப்பது சாதாரணம் அல்ல,” என்று மேயர் வலியுறுத்தினார்.
இந்த இருவரில் ஒருவரின் உடல் CAP St-Barnabé என்ற தங்கும் மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் அங்கு பணியாளர்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024ஆம் ஆண்டில் மட்டும் 108 வீடற்றோர் உயிரிழந்த நிலையில், இப்போது மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியிருப்பது, சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் அவசர நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்துகிறது.




