மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள் மூலம் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது…மேலும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ள சவுதி அரேபியா, கத்தார்,ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பெரும் பதற்ற நிலை நிலவுகிறது.தற்போது நடைபெற்று வரும் இந்த மோதலில், ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வான்வெளி தாக்குதல்களே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுவரை எந்த நாடும் தரைவழி போரை தொடங்கவில்லை.
இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் Donald Trump அவர்களிடம் ஒரு முக்கிய கேள்வி எழுப்பப்பட்டது?
ஈரானுக்குள் அமெரிக்க படைகளை அனுப்பி தரைவழி போரை தொடங்குவீர்களா? என்பதே அந்த கேள்விக்கு.
பதிலளித்த அவர்,
“இப்போதைய சூழலில் அமெரிக்க படைகளை ஈரானுக்கு அனுப்புவது நேரத்தை வீணடிக்கும் செயலாகும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரான் ஏற்கனவே பல்வேறு ராணுவ இழப்புகளை சந்தித்துள்ளதாகவும்,அந்த நாட்டின் படை பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் Abbas Araghchiஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரைவழி போரை தொடங்கினால்அவர்களின் படைகள் பெரும் இழப்பை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தரைவழி தாக்குதல் நடைபெறாது என அறிவித்திருந்தார். தற்போதுDonald Trump அவர்களின் கருத்தும் அதே நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
இதனால் இந்த மோதல் உடனடியாக முழுமையான நிலப்பரப்பு போராக மாறாது என்ற ஒரு சிறிய நிம்மதி உருவாகியுள்ளது.ஆனால் போர் நீடித்தால் உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் தொடர்கிறது.




