மேற்கு வங்க மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றியல் உரையாற்றிய பிரதமர் மோடி மம்தா பானர்ஜியின் மோசமான ஆட்சியில் மக்கள் பரிதவிப்பதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனே முக்கியம் எனக்கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள் தற்போது வன்முறைக் கலாசாரத்தைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஏழைமக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்காக ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே போராட்டத்தில் ஈடுபட்டது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.
ஊழல் செய்தவர்களையும் அவர்களுக்கு துணைப் போனவர்களையும் தமது அரசு கண்டிப்பாக தண்டிக்கும் என்றும் அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிானர்.
மேற்கு வங்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.