விமானியின் சாதுரியத்தால் விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
இங்கிலாந்தில் விமானியின் சாதுரியத்தால், பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் இந்தியாவின் ஐதராபாத்தில் இருந்து லண்டன் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது திடீரென வீசிய பலத்த காற்றால் நிலைதடுமாறி குலுங்க ஆரம்பித்தது.
ஓடுதளத்தை தொட்ட போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் மேல் எழும்பியது. இதனால் பயணிகள் அனைவரும் மரணப் பயத்தில் அலறினர். இந்நிலையில், மேல் எழும்பிய விமானத்தை, விமானி சாதுர்த்தியமாக டேக் ஆப் செய்தார். இதனால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.