உலகம் செய்திகள் புதிய செய்திகள்

திருமணம் முடிந்த 3 மாதங்கள்! கணவனுடன் பரிதாபமாக பலியான கர்ப்பிணி பெண்

பிரித்தானியாவில் திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் கணவனுடன் சேர்ந்து விபத்தில் சிக்கி பலியாகியிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு லண்டன் பகுதியில் ஹாரோ பகுதியில் 60, 30 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் 50 வயதுடைய ஒரு பெண் இருக்கும் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் 4 பேர் கத்தி முனையில் கொள்ளையடிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஹெலிகாப்டர் மற்றும் 9 கார்களில் ஏராளமான பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட அந்த கும்பல் வேகமாக அந்த இடத்திலிருந்து காரில் கிளம்பியது.
கார் செல்லக்கூடிய தவறான பாதையில் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் இடையூறு அளிக்கும் வகையிலும், பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பும் விதமாகவும் அந்த கும்பல் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது.
அப்பொழுது அந்த கார், திடீரென சாலை ஓரத்தில் இருந்த வேலியின் மீது மோதி பயங்கரமான விபத்தில் சிக்கியது.
இதனை பார்த்ததும் வேகமாக ஓடி வந்த பொலிஸார் உள்ளிருந்தவர்களை பிடிக்க முயற்சித்த போது, ஒரு பெண்ணும், ஆணும் உயிரிழந்த நிலையிலும், மற்றோரு நபர் பலத்த காயங்களுடனும் இருப்பதை பார்த்துள்ளனர்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த நபரை சிகிச்சைக்கு உட்படுத்தி கைது செய்தனர். பின்னர் இறந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, பேட்ரிக் மெக்டொனாக்கம் (19) மற்றும் ஷானு (18) என்கிற தம்பதியினர் 11 வாரங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.
மேலும், ஷானு 7 மாத கர்ப்பிணியாக இருந்ததும், ஏப்ரல் மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த பயங்கரமான சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் பேட்ரிக்கிற்கு தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகித்துள்ளனர்.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment