கடவத்தை பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரி சமிக்ஞை காட்டியுள்ளார்.
முச்சக்கர வண்டி நிறுத்தப்படாத காரணத்தினால், பொலிஸ் அதிகாரி அதனை பின் தொடர்ந்துள்ளார்.
முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது, முச்சக்கர வண்டியில் பயணித்த நபருக்கும் பொலிஸ் அதிகாரிக்கும் இடையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அப்போது முச்சக்கர வண்டியில் பயணித்த நபர், பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை எடுத்து பொலிஸ் அதிகாரியை சுட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.