உலகம் செய்திகள்

முடிவுக்கு வந்தது ரோவர் சகாப்தம் 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்த ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்தது

விண்வெளியில் சகாப்தம் கண்டுள்ள ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் தற்போது முற்றிலுமாக  செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம்செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 ராக்கெட் மூலம் நாசா அனுப்பியது. 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய ரோவர் 3 வாரம் கழித்து தனது பணிகளை தொடங்கியது.

இதன் ஆயுட் காலம் 90 நாட்கள் என கணிக்கப்பட்ட நிலையில், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி 45கிமீ தொலைவிற்கு ஆய்வு செய்து பல அரியவகை புகைப்படங்களை அனுப்பி விஞ்ஞானிகளை ஆராய்ச்சிகளுக்கு உதவியது. இந்த ரோவர், லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து வந்தது. அத்துடன் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆபர்ச்சுனிட்டி ரோவர் சிறப்பாக செயல்பட்டு செவ்வாய் கிரகம் சார்ந்த பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வந்தது.புயலில் சிக்கிய விண்கலம் செயலிழந்து விட்டதுஇந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மிகவும் மோசமான புயல் செவ்வாய் கிரகத்தில் வீசியதால் ஆபர்ச்சுனிட்டி ரோவர் சற்று செயல் இழந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 15ம் தேதி இரவு செவ்வாய் கிரகத்தில் வீசிய பெரிய புயல் மொத்தமாக ஆக்கிரமித்தது. இதனால் காணாமல் போன ரோவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் சூரிய ஒளி கிடைக்காததால் சார்ஜ் இல்லாமல் ரோவரின் 6 சக்கரங்களும் செயல் இழந்து வந்தன. அதன் பிறகு நாசா ஒருமுறைக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.15 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது இந்நிலையில் ரோவரின் ஒரே ஒரு பாகம் மட்டும் இடையில் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனுடன் கடந்த 7 மாதங்களாக தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் கடுமையாக போராடினர். ஆனால் அந்த ரோவரில் படிந்த தூசு காரணமாக அது தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது. இறுதியாக நேற்று தொடர்பு கொள்ள முயன்றும் பயனளிக்காததால் ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்து விட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஆபர்ச்சுனிட்டி ரோவர்  பல சாதனைகள் படைத்தது இருப்பதால் இந்நேரத்தை கொண்டாட்டமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று நாசா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் 15 ஆண்டுகளாக கோலோச்சி நின்ற ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலத்தின்  சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment