இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

300 கார்கள் எரிந்து நாசம் : பெங்க@ரில் விமான கண்காட்சி பார்க்கிங் பகுதியில் பயங்கர தீ!

தீ விபத்து குறித்து உயர்நிலை குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிகரெட்டை அணைக்காமல் வீசியதால் தீப்பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் சதி வேலையா என்றும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பெங்களூரு எலகங்காவில் நடந்துவரும் விமான கண்காட்சியின் போது வாகனம் நிறுத்துமிடத்தில் ஏற்பட்டபயங்கர தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட கார்கள் கருகி நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சதி வேலையா என்று விசாரணை நடந்து வருகிறது.பெங்களூரு எலகங்காவில் இரண்டாண்டுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி சாகச நிகழ்ச்சிகள் நடக்கும்.

அதன்படி இவ்வாண்டு பிப்ரவரி 20ம் தேதி கண்காட்சி துவங்கி நடந்து வருகிறது. இக்கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்தமான சுகோய், சாரங், யகோட் லான்ஸ், லகுரக ஹெலிகாப்டர், தேஜஸ், நேஷனல் ஏரோனாடிக்கல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள சாரஸ் பிடி1, ஹாக் ஐ, உள்பட 59 விமானங்கள் சாகசம் நிகழ்த்தி வருகின்றன. இந்நிலையில்இ நேற்று பிற்பகல் 12.20 மணிக்கு விமான கண்காட்சி நடந்துவரும் மைதானத்தின் 5வது நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் பகுதியில் திடீரென புகை வெளியேறியது. அதை கவனித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் உடனடியாக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தார்.

5 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால்இ தீ மளமளவென பிடித்துக் கொண்டதால் ஒன்றன் பின் ஒன்றாக கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் கண்காட்சி மைதானம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இப்புகையால் 10 கி.மீட்டர் தூரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது.சம்பவம் நடந்த 15 நிமிடம் கழித்து 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகின. கார்கள் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் உயரமாக கோரபுல் வளர்ந்துள்ளது. தீ பிடித்ததும் புல் எரிந்தது. காரின் டீசல் டேங்க் மற்றும் டயர்கள் வெடித்து சிதறின. குண்டு வெடிப்பது போல் சத்தம் கேட்டது. பிஎம்டப்ளிலிவ், பார்ச்சூனர், ஜாக்கூவர், இனோவா உள்பட பல விலை உயர்த்த கார்கள் தீயில் கருகியதின் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்வதற்காக பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.சி.சிந்து வந்தார். அப்போதுதான் தீ விபத்து ஏற்பட்டது.

உடனேஇ கண்காட்சி நிறுத்தப்பட்டது. 3 மணி நேரம் கழித்து தீ முழுமையாக அணைக்கப்பட்டு புகை நின்றதை தொடர்ந்து மீண்டும் பகல் 3.15 மணிக்கு விமான கண்காட்சி தொடங்கியது. எல்சிஏ விமானத்தை பி.சி.சிந்து இயக்கினார். அடுத்தடுத்து அசம்பாவிதம்: கடந்த 1ம் தேதி எச்ஏஎல் விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி, 2பைலட்டுகள் உடல் கருகி உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, விமான கண்காட்சியின்போது சாகசம் செய்வதற்காக கடந்த 19ம் தேதி சூரியகிரண் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டபோது இரு விமானங்கள் மோதிக்கொண்டதில் ஒரு விமானி உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் மக்கள் மனதில் இருந்து இன்னும் மறையாத நிலையில், நேற்று நடந்த தீ விபத்து மூன்றாவது சம்பவமாகியுள்ளது. இதற்கிடையே, விபத்து காரணமாக கண்காட்சியில் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்ட சூரியகிரண் விமானங்கள் நேற்று முதல் கண்காட்சியில் பங்கேற்றன.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment