இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு..அடிக்கல் நாட்டுவிழா! பணிகள் விரைவில் துவங்க உள்ளது

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய திட்டத்திற்கு, முதல்வர், இ.பி.எஸ்., காணொலி காட்சி மூலம், அடிக்கல் நாட்டினார். இதனால், நிலைய கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கோயம்பேடில், வெளியூர் பஸ்களால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலுாரில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது.இதற்காக, வருவாய் துறையிடம் இருந்து, 80 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. ஆனால், இங்கு கற்காலத்தை சேர்ந்ததாக கருதப்படும், பாரம்பரிய சின்னங்கள் இருப்பதால், இப்பகுதியில் கட்டுமான திட்டங்களுக்கு, தொல்லியல் துறை தடை விதித்து இருந்தது.இதனால், புதிய பஸ் நிலையத்திற்கு சிக்கல் ஏற்பட்டது.

தொல்லியல் துறை விதிப்படி, பாரம்பரிய சின்னம் இருப்பதாக கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து, முதல்இ 100 மீட்டர் வரையிலான பகுதியில், கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ள முடியாது.இதிலிருந்து அடுத்தஇ 200 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில், கட்டுமான பணிக்கு, தொல்லியல் துறை தடையின்மை சான்று பெறுவது கட்டாயம்.இதன் அடிப்படையில், பஸ் நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியில், 200 மீட்டர் வரம்புக்குள் வரும் இடத்தில், கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக, தடையின்மை சான்று கோரி, சி.எம்.டி.ஏ., மத்திய தொல்லியல் துறையிடம் விண்ணப்பித்தது.இதில், தேசிய பாரம்பரிய சின்னங்கள் ஆணையம், சில நிபந்தனைகள் அடிப்படையில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்கு, தடையின்மை சான்று வழங்கியது.இது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

கிளாம்பாக்கத்தில், பாரம்பரிய சின்னம் இருக்கும் இடத்தில் இருந்து முதல்இ 100 மீட்டர் பகுதியை, பசுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்.அங்கு பொதுமக்களுக்கு, பாரம்பரிய சின்னம் குறித்த தகவல்கள் அளிக்கும் வகையில், வழிகாட்டி மையத்தை அமைக்க வேண்டும்.தொல்லியல் வல்லுனர்கள் மேற்பார்வையில், இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், 200 மீட்டர் வரம்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டு மானங்களின் உயரம், 34 மீட்டருக்குள் இருக்க வேண்டும்.இந்த நிபந்தனைகள் அடிப்படையில், புதிய பஸ் நிலைய பணிகளுக்கு, தேசிய பாரம்பரிய சின்னங்கள் ஆணையம், தடையின்மை சான்று அளித்துள்ளது. இவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகள் துவங்கப் பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய திட்டத்திற்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம், காணொலி காட்சி மூலம், அடிக்கல் நாட்டினார். இதனால், நிலைய கட்டுமான பணிகள், விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment