நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவை ஜிஎஸ்டி குறைப்பு பூர்த்தி செய்துள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் 33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அருண் ஜேட்லி.
கட்டுமானம் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி, 8 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.மலிவு விலை வீடுகளைப் பொறுத்தவரை கார்பெட் ஏரியா எனப்படும் வீட்டின் சரியான பரப்பரளவும் மற்றும் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மெட்ரோ நகரங்களில் 60 சதுர மீட்டர் பரப்பளவில், 45 லட்சம் ரூபாய்க்குள் கட்டப்படும் வீடுகள் மலிவு விலை வீடுகள் என்ற பட்டியலுக்கு வரும் என்றும் மெட்ரோ அல்லாத மற்ற நகரங்களில் 90 சதுர மீட்டர் கார்பட் ஏரியா மற்றும் 45 லட்சம் ரூபாய் விலைக்குள் கட்டப்படும் வீடுகள் மலிவு வீடுகளான கணக்கில் கொள்ளப்படும் என்றும் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது என்றும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.
லாட்டரி சீட்டுகள் மீதான ஜிஎஸ்டியை குறைப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் லாட்டரி சீட்டு விவகாரம் குறித்த ஆலோசனை நடத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் கூட்டப்படும் என்று தெரிவித்தார்.அருண்ஜேட்லி டுவிட்:33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 8% இல் இருந்து 1மூஆக குறைக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான ஜிஎஸ்டி 12% லிருந்து 5மூஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த வரிச்சலுகை கிடைக்கும். இதன் மூலம் நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவை ஜிஎஸ்டி குறைப்பு பூர்த்தி செய்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.