யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் முன்னாள் பிரதம நூலகர் திருமதி ரூபாவதி நடராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணம் பொது நூலகம் அன்றும் – இன்றும்’ எனும் நூல் கடந்த(23) சனிக்கிழமை பொது நூலக மண்டபத்தில் வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி பொ. பாலசுந்தரம் பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், சிறப்பு உரை ஒன்றினையும் நிகழ்த்தியிருந்தார்.
இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்குமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் முதற்பிரதியை முன்னாள் வடகிழக்கு கல்வி பண்பாட்டலுவல்கள், மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்கள் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நூலாசிரியர் திருமதி ரூபாவதி நடராஜா அவர்களுக்கான கௌரவிப்பு ஒன்றினை யாழ் மாநகரசபை சார்பில் முதல்வர் மற்றும் ஆணையாளர் இணைந்து வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்
மேலும் இந் நிகழ்வில் மாநகரசபையின் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆணையாளர்கள், முன்னாள் பிரதம நூலகர்கள், மாநகரசபையின் ஆணையாளர் திரு. த. ஜெயசீலன், மாநகரசபை உத்தியோகத்தர்கள், பொதுநூலகத்தின் பிரதம நூலகர் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.