பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் சாஹோ. இந்தப்படத்தில் கதாநாயகிகளாக ஷ்ரத்தா கபூர் மற்றும் எவ்லின் சர்மா நடிக்கின்றனர். சமீபத்தில் தன்னை ரசிகர் ஒருவர் பயமுறுத்திய சம்பவம் குறித்து பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் எவ்லின் சர்மா.
சமீபத்தில் சாஹோ படத்தின் ஷூட்டிங் முடிந்து தனது ஓட்டல் அறைக்கு திரும்பிய எவ்லின் சர்மாவை காண்பதற்காக ரிசப்ஷனில் ரசிகர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் காத்துக்கொண்டு இருந்தாராம். ரசிகர்களை சந்தித்து பேசுவதில் தனக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும்இ அதற்காக நேரம் கெட்ட நேரத்தில் வந்து சந்திப்பதையும் பேசுவதையும் எவ்லின் ஒருபோதும் விரும்புவதில்லையாம்.
பின்பு அங்கிருந்து ஒரு சிலரின் உதவியால் அந்த ரசிகரை அங்கிருந்து அனுப்பச்சொல்லி விட்டு தனது அறைக்கு சென்று விட்டாராம். இப்படி சில நேரங்களில் தன்னை பார்ப்பதற்காக தன் அபார்ட்மென்ட்டிற்கோ,,தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கோ வந்து யாராவது ரசிகர்கள் காத்திருப்பதை பார்க்கும்போது தனக்கு பயம் ஏற்படுவதாக கூறுகிறார் எவ்லின் ஷர்மா.