கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் போட்டியில் இன்று முதலாவதாக மோதும் இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள்!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர், அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, நாளை ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா அணிக்கு விராட் கோஹ்லியும், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்குகின்றனர்.

இப்போட்டியில் இரு அணி வீரர்;களின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போட்டிக்காக தற்போது வீரர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் ரோஹிர் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் டோனி, லோகேஷ் ராகுல், ரிஷப்பண்ந் ஆகிய துடுப்பாட்ட வீரரகள் உள்ளனர்.

பந்து வீச்சில் பும்ரா, மொஹமட் ஷமி, சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர். சகலதுறை வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்ரேலிய அணியில், உஸ்மான் கவாஜா, ஷோன் மார்ஷ், ஆர்ஸி ஷோர்ட் பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோயினிஸ் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர்.

பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ், நாதன் கோல்டர் நைல், நாதன் லியோன், ஆடம் செம்பா, ஜெய் ரிச்சர்டசன், ஹெண்ட்ரூ டை ஆகியோர் உள்ளனர்.

இப்போட்டியில், பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி நடைபெறும் ஹைதராபாத் – ராஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தை பொறுத்தவரை இம்மைதானத்தில் 286 ஓட்டங்களே முதல் இன்னிங்ஸிற்காக அதிகபட்ச ஓட்டமாக பெறப்பட்டுள்ளது.

சேஸிங் ஓட்ட எண்ணிக்கையாக 252 ஓட்டங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல இரு அணிகளும் இதுவரை 130 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா அணி 47 போட்டிகளிலும்இ அவுஸ்ரேலியா அணி 73 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் 10 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

ரி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவற்காக இந்தியா சென்றுள்ள அவுஸ்ரேலியா அணி, முதலில் நடைபெற்ற ரி-20 தொடரை முழுமையான வெற்றிக்கொண்டு சரித்திரம் படைத்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்டே ஆக வேண்டுமென்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அத்தோடு சொந்த மண்ணில் பெற்ற அவமான தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்பதில் அவுஸ்ரேலியாவும் தீவிரமாகவுள்ளது.

Recent posts

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு – வில்லியம்சன்

கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி...
Thamil Paarvai

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும்...
Thamil Paarvai

Leave a Comment