சூடாக தேநீர் அருந்துவதால் உணவுக்குழல் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வெயில் காலமோ அல்லது குளிர் காலமோ பெரும்பாலானவர்கள் சூடாக தேநீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இன்னும் சிலரோ காலையில் எழுந்தவுடனே தேநீர் அருந்தினால் தான் மற்ற வேலையே செய்யும் அளவிற்கு தேநீர் மோகம் மக்களிடையே தொற்றியுள்ளது. சூடு இல்லாமல் தேநீர்இ காபி குடிப்பவர்களின் எண்ணிக்கையோ மிக குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் சூடாக தேநீர் அருந்தினால் உணவுக்குழாயை புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. அதாவது 60 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சூடாக தேநீர் அருந்துவதால் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல நாள் ஒன்றுக்கு 700 மி.லி., தேநீரை சூடாக அருந்துவதாலும் 90 சதவிகித அளவிற்கு புற்றுநோய் தாக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு இரண்டு பேர் புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். அதாவது ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 1,300 பேர் புற்றுநோயால் உயிரிழப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நமது வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது. அதிகமான சூட்டுடன் டீயோ, காபியோ குடிப்பதால் உணவுக்குழாயின் சுவர் பாதிக்கப்பட்டு திசுக்கள் பலவீனமடைகின்றன. இதனால் கேன்சர் கட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க புற்றுநோய் சங்கம் கடந்த 13 ஆண்டுகளாக 40 முதல் 75 வயதுக்குட்பட்ட சுமார் 50,045 பேரிடம் நடத்திய ஆய்வில், சூடாக தேநீர் அருந்துவதால் 317 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. புகையிலையால் மட்டும் ஒருவருக்கு புற்றுநோய் வருவதில்லை, புத்துணர்வுக்காக அருந்தும் தேநீராலும் கூட புற்றுநோய் ஏற்படும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதிக சூடு இல்லாத தேநீர் அருந்தினால் இத்தகைய பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
previous post
Recent posts
10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்
பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..
தமிழரசு கட்சியின் மத்திய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி
இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.
இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, வின்ஹெடோ...
138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
இலங்கைக்கு 3 வது இடம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...