ஐ.பி.எல்., தொடரின் 12வது ‘சீசன்’ நாளை துவங்குகிறது. துவக்கவிழா ரத்து செய்யப்பட்டு, இதற்கான செலவை புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க ஐ.பி.எல்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் பெங்களூரு, சென்னை அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான, ‘டிக்கெட்’ வருமானத்தை புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனி, ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கிறார். நலநிதிக்கான காசோலையை அவர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.