உலகம் செய்திகள் புதிய செய்திகள்

சிறுமி ஒருவர் புகைப்படங்களை பார்த்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் !

சமூகவலைதளத்தில் மன அழுத்தம், தற்கொலை தொடர்பான புகைப்படங்களை பார்த்து உயிரை மாய்த்து கொண்ட பிரித்தானிய சிறுமியின் உறவினர்களை தொடர்பு கொண்டு இளவரசர் வில்லியம் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலி ரூசல் (14) என்ற சிறுமி சமூகவலைதளத்தில் கவலை, மன அழுத்தம், மற்றும் தற்கொலை புகைப்படங்களை பார்த்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் பிரித்தானிய இளவரசர் வில்லியம் இது குறித்து கவலை தெரிவித்து கடந்த நவம்பரில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க சமூகவலைதள நிறுவனங்கள் போதுமான நடவடிக்கையை எடுப்பதில்லை.

ஓன்லைனில் மற்றவர்கள் மனதை நோகும்படி பேசுவது, வெறுப்புணர்வை பரப்புவது போன்ற விடயங்களை தடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மேலும் மெனக்கெட வேண்டும் என பேசியிருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமி மாலியின் உறவினர்களை தனிப்பட்ட முறையில் இளவரசர் வில்லியம் தொடர்பு கொண்டு பேசுவுள்ளதாக Telegraph பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையில் தனது மகளின் மரணத்துக்கு காரணம் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் தான் எனவும், சமூகவலைதளங்கள் பாதுகாப்பான இடமாக எல்லோருக்கும் இருக்கவேண்டும் எனவும் அதிலும் முக்கியமாக இளம் வயது நபர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத இடமாக இருக்க வேண்டும் எனவும் மாலியின் தந்தை இயன் கூறியுள்ளார்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment