மன்னார் – தட்சணா மருதமடு பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா எனும் 28 வயது பெண் தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு சென்ற நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு எதிர்வரும் பத்தாம் திகதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வந்துள்ளன.
இந்த நிலையில் குறித்த இளம்பெண்ணுக்கு தலைவலி ஏற்பட்டதை தொடர்ந்து மயக்கமடைந்த நிலையில் அவரை உறவினர்கள் உடனடியாக மன்னார் மடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்இ குறித்த பெண்ணை பரிசோதித்து பார்த்த போது அவரது தலையில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த கட்டியினை நீக்குவதற்காக சத்திரசிகிச்சையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளதுடன், நேற்று பிற்பகல் அவர் உயிர் பிரிந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.