இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சடலத்தை 25 வருடங்களாக பாதுகாத்து யாழ் கொண்டுவரப்பட்ட உடல்…..

இத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி அவரது சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாலை அவரது விருப்பத்திற்கமைய அவரது சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த எம் ஸ்ரிபன் ஜோகி என்பவர் இத்தாலி நாட்டிற்கு சென்று அங்கு தொழில் புரிந்துள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி அவருடைய 49ஆவது வயதில் அவர் இறந்துள்ளார்.

அவர் தனது இறுதி ஆசையாக தான் உயிரிழந்த பின்னர் தனது சடலத்தை தனது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு கொண்டுச்சென்று அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.

அக்கால பகுதியில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரம் அடைந்திருந்தமையால் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல் நிலவியுள்ளது. இதனையடுத்து அவரது சடலத்தை 25 வருடங்களுக்கு பாதுகாக்க நிறுவனம் ஒன்றிடம் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சடலத்தை இலங்கை கொண்டுவர உறவினர்கள் முயற்சித்த போதும் 25 வருட கால ஒப்பந்தம் உள்ளமையால்இ மீள பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது 25 வருடங்கள் நிறைவடைந்தமையினால் அவரது சடலத்தை பெற்ற உறவினர்கள்இ அதனை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment