800 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரிய வாய்ப்பிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் நட்சத்திரம்
![](https://paarvaionline.com/wp-content/uploads/2020/12/Christmas-1024x683.jpg)
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய இரண்டு கிரகங்களான வியாழன் மற்றும் சனியை பூமியிலிருந்து பார்க்கும்போது, இந்த இரண்டு கிரகங்களும் அருகருகே வரும்போது பெரிய நட்சத்திரத்தை போல ஒளிரும். இந்த வெளிச்சமே கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே
வியாழன் மற்றும் சனி கோள்களின் சந்திப்பு ஒவ்வொரு 20 வருடத்துக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் 800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தெரியும்.
இரண்டு கோள்களும் நெருங்கி வரும் என்ற போதிலும் அவை இரண்டிற்கும் மில்லியன் மைல்கணக்கில் இடைவெளி இருக்கும். இவை இரண்டும் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை அருகில் வருகின்றது. கடைசியாக 1226ஆம் ஆண்டு இந்த அரிய நிகழ்வை பூமியில் இருந்து காண முடிந்தது. அதற்கு அடுத்த 400 வருடங்கள் கழித்து 1623ஆம் ஆண்டு நெருங்கி வந்தபோது பூமியில் இருந்து இந்த நிகழ்வை காண முடியவில்லை. இதனால் 800 ஆண்டுகள் கழித்து தற்போது இந்நிகழ்வு தெரிய இருக்கிறது.
டிசம்பர் 21ஆம் தேதி
கடைசியாக கிறிஸ்துமஸ் நட்சத்திரம் 1226ஆம் ஆண்டு தோன்றியது. அதன்பின் இந்த நிகழ்வு வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஏற்பட உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய நாள் இந்த வருடத்தின் நீண்ட இரவாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.
இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வரும் 20ஆம் தேதி சூரிய மறைவுக்கு பின் தோன்றி 22ஆம் தேதி வரை தெரியும். ஆனால், 21ஆம் தேதி இரவு தான் மிக தெளிவாக, பிரகாசமாக தெரியும்.
பார்க்க தவறாதீர்கள்
இந்த நட்சத்திரத்தை உலகின் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் மற்றும் டெலெஸ்கோப் கருவியை கொண்டு பார்க்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
800 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த அரிய நிகழ்வை கண்டுகளிக்க வானியல் ஆர்வலர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர்.