உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கொரோனா வைரஸ் இன் புதிய அவதாரம்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்   கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

பல மாத ஆராய்ச்சிக்கு பின் இந்த கொரோனா வைரசுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. பைசர், மாடர்னா, ஸ்புட்னிக் – வி, அஸ்டரா ஜெனகா உள்ளிட்ட தடுப்பூசிகள் வைரசை தடுப்பதில் பெரும் பங்காற்றுவது ஆய்வில் தெரியவந்தது.

குறிப்பாக பைசர், மாடர்னா தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிக பலன் அளித்ததால் அந்த தடுப்பூசிகளை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.

இதனால், இத்துடன் கொரோனா வைரசின் தாக்கமும், அதனால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளும் நின்று இந்த பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உலக மக்கள் நிம்மதி பெரும்மூச்சுவிட்ட நிலையில் இங்கிலாந்தில் இருந்து பெரும் அதிர்ச்சி தரும் செய்தி வந்தது.

அதுதான் இந்த கொரோனா வைரஸ் புதிய வகைக்கு மாறியுள்ளது என்ற தகவல். இந்த புதியவகை கொரோனா வைரஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

புதிய வகை கொரோனா

* இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துவந்தது. அதற்கான காரணத்தை கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவந்தனர். அப்போதுதான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவைரசின் தன்மையை விட தற்போதுள்ள கொரோனா வைரசின் தன்மைகள் மாற்றமடைந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

* பொதுவாக வைரஸ் வளர்சிதை மாற்றம் அடைந்து தனது தன்மையை மாற்றிக்கொண்டே இருக்கும். ஆனால், அந்த மாற்றம் பெரும்பாலும் சிறிய அளவில் தான் இருக்கும். அந்த மாற்றங்களால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

* அதேபோன்று இந்த கொரோனா வைரஸ் இதுவரை 4 ஆயிரத்திற்கு அதிகமான முறை வளர்சிதை மாற்றமடைந்து தனது தன்மையை மாற்றி தகவமைத்துக்கொண்டுள்ளது. வைரஸ் மனித உடலில் தன்னை தகவமைத்துக்கொள்வதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

* அதேபோன்றுதான் தற்போது வைரஸ் வளர்சிதை மாற்றமடைந்து தன்னை தகவமைத்துள்ளது. தற்போது வைரஸ் பெற்றுள்ள வளர்சிதை மாற்றத்திற்கு விஞ்ஞானிகள் N501Y என பெயரிட்டுள்ளனர்.

* இந்த உருமாற்றம் வைரஸ் இதற்கு முந்தைய நிலையை விட மனித உடலில் உள்ள செல்களில் சுலபமாக இணைந்துகொள்கிறது. வைரசின் புரத அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றமே இந்த தகவமைப்பு மாற்றத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த புரத அமைப்பின் வளர்ச்சியால் ஏற்பட்ட தகவமைப்புகள் மனித செல்களுடன் சுலமாக இணைந்து கொள்கிறது.

* தற்போது வளர்சிதை மாற்றமடைந்துள்ள வைரஸ் முந்தைய வைரசை விட 70 சதவிகிதம் வேகமாக பரவும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் 60 வெவ்வெறு இடங்களில் 1,000 -க்கும் அதிகமானோருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த புதிய வைரஸ் வேகமாக பரவும் என உறுதியாகியுள்ள போதும் இந்த வைரசால் பழைய வைரசை விட அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது என்ற தகவலை உறுதிபடுத்து இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

* இதன் மூலம் இந்த கொரோனா வைரசும் பழைய அறிகுறிகளுடனேயே இருக்கும் என தெரியவந்துள்ளது. ஆனால், இந்த வைரஸ் பரவும் வேகம் மிக அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

* மனித உடலில் தொடர்ந்து பரவவும், நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி போன்றவற்றால் அழிந்துவிடாமல் தன்னை காப்பாற்றிக்கொள்ளவே கொரோனா வைரஸ் தனது தன்மையை தொடர்ந்து மாற்றிக்கொள்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

* இந்த தகவமைப்பு மனித உடலில் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க முயற்சிக்கும் எனவும், புதிய வகை வைரசுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடல் உருவாக்க தாமதத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கும் என விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.

* இதற்கிடையில், இந்த வளர்சிதை மாற்றமடைந்த புதியவகை கொரோனா இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த வைரஸ் ஏற்கனவே வேறு நாடுகளில் பரவி இருக்கலாம் எனவும் இங்கிலாந்தில் மருத்துவத்துறையில் உள்ள நவீன ஆராய்ச்சி நடைமுறைகளால் வைரசின் வளர்சிதை மாற்றம் தொடர்பான தகவல்கள் தெரியவந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

* எனென்றால், இந்த புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் பரவும் தகவல் கடந்த 12-ம் தேதி தெரியவந்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலானோருக்கு இதே வளர்சிதை மாற்றமடைந்த கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் மாதமே பரவியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

தடுப்பூசி:-

* கொரோனா வைரஸ் தனது தகவமைப்பை மாற்றிக்கொண்டு வேகமாக பரவி வரும் போதும் தற்போது பயன்பாட்டில் உள்ள பைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் இந்த புதியவகை வைரசையும் கட்டுப்படுத்தும் என தெரியவந்துள்ளது.

* ஸ்புட்னிக் வி தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசிகளும் தற்போதுள்ள புதியவகை கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கொரோனா வேகமாக பரவும் வகையில் வளர்சிதை மாற்றமடைந்துள்ளபோதும் தற்போதுள்ள தடுப்புசிகள் வைரசை கட்டுப்படுத்தும் என்ற தகவல் உலக மக்களுக்கு மிகுந்த ஆறுதல்

அளிக்கும் வகையில் இருந்தாலும் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே வைரசின் மாற்றம் நமக்கு நினைவு படுத்துகிறது.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment