உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

டாமினிக் என்று பெயர் சூட்டியதால், லட்சக்கணக்கில் பரிசு வென்ற பெற்றோர்.

நாம ஒன்னு ரெண்டு தடவ அதிர்ஷ்டம் அடிச்சு பார்த்து இருப்போம். ஆனால் 60 ஆண்டுகளுக்கும் அதிர்ஷ்டம் அடிச்சு பார்த்து இருக்கீங்களா. அப்படித்தான் இங்க ஒரு தம்பதியினர் அப்படியொரு அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். பிறக்கும் போதே இவர்களின் குழந்தை இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

ஆமாங்க ஆஸ்திரேலியாவில் உள்ள டோமினோஸ் நிறுவனம் அவர்களின் 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நோக்கத்தில் ஒரு போட்டியை அறிவித்து இருந்தது. அதாவது டிசம்பர் 9 ஆம் தேதி பிறக்கும் குடும்பத்தின் முதல் குழந்தைக்கு ஆண் குழந்தையாக இருந்தால் டொமினிக் என்றும் பெண் குழந்தையாக இருந்தால் டொமினிக்யூ எனப் பெயரிட்டால் அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா கிடைக்கும் அளவிற்கான பணத்தைப் பரிசாக வழங்குவதாக அவர்கள் அறிவித்திருந்தன.

இதன்படி சிட்னியைச் சேர்ந்த தம்பதியினரான சிலிமென்டைன் ஓல்டு பீல்டு மற்றும் ஆண்டனி லாட் என்ற தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை அன்றைய நாளில் ஈன்றெடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்று உள்ளனர்.

கடைசி நேரத்தில் வந்த அதிர்ஷ்டத்தை பாருங்க

முதலில் இந்த தம்பதியினருக்கு இப்படி ஒரு போட்டி நடப்பதே தெரியாதாம். இந்த போட்டிக்காக விண்ணப்ப்பித்தவர்களில் ஒருவருக்கே இந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது சிலிமென்டைன் பிரசவ வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் சுமார் 72 மணி நேரம் பிரசவ வலியில் போராடியுள்ளார். அதன் பிறகு இந்த வருடம் டிசம்பர் 9 ஆம் தேதி புதன்கிழமை அன்று சரியாக அதிகாலை 1.47 மணிக்கு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து அந்த தம்பதியினர் கூறியதாவது குழந்தை பிறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் என் அம்மா டோமினோஸ் போட்டி விளம்பரத்தை எங்களுக்கு தெரியப்படுத்தினார். நானும் என் கணவரும் அதைக் கண்டு சிரித்தோம். ஏனெனில் எங்க குழந்தை செவ்வாய் அன்றே பிறந்து விடுவான் என்று நினைத்தோம். ஆனால் அவன் சரியாக அதிகாலை 1.47 மணிக்கு தான் பிறந்தான். உண்மையில் எங்களுக்கு எதிர்பாராத விதமாகத்தான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது என சிலிமென்டைன் கூறியுள்ளார்.

எனவே உடனே அந்த போட்டியில் பங்கு கொள்ள அவர்கள் தங்கள் மகனுக்கு டோமினிக் என்ற பெயரையும் சூட்டி பிறப்புச் சான்றிதழ் உடன் விண்ணப்பித்து உள்ளனர். அப்படியே பரிசுத் தொகையையும் தட்டிச் சென்று உள்ளனர்.

பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா ?

அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா வழங்குவதற்கான பணத்தை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு பீட்சாவின் விலை 14 டாலர் ஆகும். எனவே மொத்தமாக சேர்த்து 60 வருடத்திற்கு கிட்டத்தட்ட 10,080 ஆஸ்திரேலியா டாலரை டோமினோஸ் நிறுவனம் அந்த தம்பதியினருக்கு வழங்கியுள்ளது. நம்முடைய இந்திய மதிப்புக்கு கிட்டத்தட்ட 5.63 லட்சம் ரூபாய் ஆகும். பிறக்கும் போதே அவர்களுடைய மகன் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளதாக அந்த தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெற்றி கொண்டாட்டம்

இது குறித்து டோமினோஸ் நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. 60 ஆண்டு காலமாக நாங்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் 60 ஆவது ஆண்டு விழாவை இப்படியொரு வித்தியாசமான போட்டியுடன் கொண்டாடியது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

இந்த நன்னாளில் டோமினிக் பிறந்ததும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இந்த பரிசுத் தொகையுடன் சிலிமென்டைன் ஓல்டு பீல்டு மற்றும் ஆண்டனி லாட் தம்பதியினருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளனர். பீட்சா உலகில் எங்கள் சேவை இன்னும் தொடரும் என டோமினோஸ் நிறுவனம் பறைசாற்றியுள்ளது.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment