உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

டாமினிக் என்று பெயர் சூட்டியதால், லட்சக்கணக்கில் பரிசு வென்ற பெற்றோர்.

நாம ஒன்னு ரெண்டு தடவ அதிர்ஷ்டம் அடிச்சு பார்த்து இருப்போம். ஆனால் 60 ஆண்டுகளுக்கும் அதிர்ஷ்டம் அடிச்சு பார்த்து இருக்கீங்களா. அப்படித்தான் இங்க ஒரு தம்பதியினர் அப்படியொரு அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். பிறக்கும் போதே இவர்களின் குழந்தை இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

ஆமாங்க ஆஸ்திரேலியாவில் உள்ள டோமினோஸ் நிறுவனம் அவர்களின் 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நோக்கத்தில் ஒரு போட்டியை அறிவித்து இருந்தது. அதாவது டிசம்பர் 9 ஆம் தேதி பிறக்கும் குடும்பத்தின் முதல் குழந்தைக்கு ஆண் குழந்தையாக இருந்தால் டொமினிக் என்றும் பெண் குழந்தையாக இருந்தால் டொமினிக்யூ எனப் பெயரிட்டால் அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா கிடைக்கும் அளவிற்கான பணத்தைப் பரிசாக வழங்குவதாக அவர்கள் அறிவித்திருந்தன.

இதன்படி சிட்னியைச் சேர்ந்த தம்பதியினரான சிலிமென்டைன் ஓல்டு பீல்டு மற்றும் ஆண்டனி லாட் என்ற தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை அன்றைய நாளில் ஈன்றெடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்று உள்ளனர்.

கடைசி நேரத்தில் வந்த அதிர்ஷ்டத்தை பாருங்க

முதலில் இந்த தம்பதியினருக்கு இப்படி ஒரு போட்டி நடப்பதே தெரியாதாம். இந்த போட்டிக்காக விண்ணப்ப்பித்தவர்களில் ஒருவருக்கே இந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது சிலிமென்டைன் பிரசவ வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் சுமார் 72 மணி நேரம் பிரசவ வலியில் போராடியுள்ளார். அதன் பிறகு இந்த வருடம் டிசம்பர் 9 ஆம் தேதி புதன்கிழமை அன்று சரியாக அதிகாலை 1.47 மணிக்கு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து அந்த தம்பதியினர் கூறியதாவது குழந்தை பிறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் என் அம்மா டோமினோஸ் போட்டி விளம்பரத்தை எங்களுக்கு தெரியப்படுத்தினார். நானும் என் கணவரும் அதைக் கண்டு சிரித்தோம். ஏனெனில் எங்க குழந்தை செவ்வாய் அன்றே பிறந்து விடுவான் என்று நினைத்தோம். ஆனால் அவன் சரியாக அதிகாலை 1.47 மணிக்கு தான் பிறந்தான். உண்மையில் எங்களுக்கு எதிர்பாராத விதமாகத்தான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது என சிலிமென்டைன் கூறியுள்ளார்.

எனவே உடனே அந்த போட்டியில் பங்கு கொள்ள அவர்கள் தங்கள் மகனுக்கு டோமினிக் என்ற பெயரையும் சூட்டி பிறப்புச் சான்றிதழ் உடன் விண்ணப்பித்து உள்ளனர். அப்படியே பரிசுத் தொகையையும் தட்டிச் சென்று உள்ளனர்.

பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா ?

அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா வழங்குவதற்கான பணத்தை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு பீட்சாவின் விலை 14 டாலர் ஆகும். எனவே மொத்தமாக சேர்த்து 60 வருடத்திற்கு கிட்டத்தட்ட 10,080 ஆஸ்திரேலியா டாலரை டோமினோஸ் நிறுவனம் அந்த தம்பதியினருக்கு வழங்கியுள்ளது. நம்முடைய இந்திய மதிப்புக்கு கிட்டத்தட்ட 5.63 லட்சம் ரூபாய் ஆகும். பிறக்கும் போதே அவர்களுடைய மகன் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளதாக அந்த தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெற்றி கொண்டாட்டம்

இது குறித்து டோமினோஸ் நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. 60 ஆண்டு காலமாக நாங்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் 60 ஆவது ஆண்டு விழாவை இப்படியொரு வித்தியாசமான போட்டியுடன் கொண்டாடியது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

இந்த நன்னாளில் டோமினிக் பிறந்ததும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இந்த பரிசுத் தொகையுடன் சிலிமென்டைன் ஓல்டு பீல்டு மற்றும் ஆண்டனி லாட் தம்பதியினருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளனர். பீட்சா உலகில் எங்கள் சேவை இன்னும் தொடரும் என டோமினோஸ் நிறுவனம் பறைசாற்றியுள்ளது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment