மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் ஆதரவாளர்கள் பேரணியை வரவேற்றுள்ளனர். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணிக்கு மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் தமிழ் தேசிய பற்றாளர்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பேரணியில் இணைந்து கொண்டு திருமலை நோக்கி நகர்கின்றனர்.

நேற்றைய தினம் ஆரம்பமான பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் நடைபவனியாக தொடர்ந்து நேற்று மட்டக்களப்பு தாளங்குடா பகுதியில் முடிவுற்றது.
அதன் பின்னர் இன்று காலை தாளங்குடாவில் ஆரம்பமான போராட்டம் மட்டக்களப்பு காத்தான்குடி சென்றடைந்த நிலையில் அங்கு பெரும் திரளான முஸ்லிம் மக்களும் இந்த போராட்டத்தில் இணைந்து ஆதரவு தெரிவித்து போராட்டத்திற்கு வலுச் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த உணர்வெழுச்சி பேரணி மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையை அண்மித்த நிலையில், அங்கும் பெருமளவான தமிழ் தேசிய பற்றாளர்கள் இணைந்து கொண்டு, திருகோணமலை நோக்கி பேரணி நகர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.