Featured இந்தியா கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் தொலைபேசியில் பேச்சு – விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை .

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம், இந்தியாவை கடந்து பல்வேறு உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. எனவே இது தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் விவசாயிகள் போராட்டத்தால் எழுந்துள்ள சூழல் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடியூ கடந்த டிசம்பர் மாதம் கவலை வெளியிட்டு இருந்தார். மேலும் உரிமைக்காக அமைதியான முறையில் நடந்து வரும் போராட்டங்களுக்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார்.

கனடா பிரதமரின் இந்த கருத்து, இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனவே இந்தியாவுக்கான கனடா தூதர் நதிர் படேலுக்கு சம்மன் அனுப்பிய வெளியுறவுத்துறை அமைச்சகம், விவசாயிகள் போராட்டத்தில் கனடா பிரதமரும், மந்திரிகளும் தலையிடுவது ஏற்க முடியாது எனக்கூறியது. இது தொடர்ந்தால் இரு நாட்டு உறவில் தீவிர பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் மற்றும் ஆலோசனைக்குப்பின் கொண்டு வரப்பட்டது எனவும், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு மிகுந்த பலனை ஏற்படுத்தும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடியூ நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜனநாயக கொள்கைகளில் இரு நாடுகளின் உறுதிப்பாடு, சமீபத்திய போராட்டம், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முக்கியத்துவம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக கனடா பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

மேலும் கொரோனாவுக்கு எதிராக இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டதுடன், இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு முயற்சிகள் மற்றும் அது உலக நாடுகளுக்கு மிகுந்த உதவியாக இருப்பது குறித்தும் இருவரும் விவாதித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடியுடனான பேச்சு சிறந்த முறையில் அமைந்ததாகவும், இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் கனடா பிரதமரும் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த உரையாடல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவிடம் இருந்து கனடாவுக்கு தேவைப்படும் தடுப்பூசிகள் குறித்து டிரூடியூ தெரிவித்ததாகவும், அதற்கு இந்தியா உதவும் என பிரதமர் மோடி உறுதியளித்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

Recent posts

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

இலங்கை மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. இரா. சம்பந்தன்...
Thamil Paarvai

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

Leave a Comment