Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

ரொறன்ரோ நபருக்கு இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்கள் கொலை வழக்கில்கிடைக்கவிருக்கும் தண்டனை

இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்களை கொன்று உடல்களை துண்டாக சிதைத்த நபர் தொடர்பில் தண்டனை தீர்ப்பு விசாரணை இன்று துவங்க உள்ளது.

ரொறன்ரோவை சேர்ந்த 47 வயது ஆதம் ஸ்ட்ராங் என்பவர் Rori Hache மற்றும் Kandis Fitzpatrick ஆகியோர் கொலை வழக்கில் மார்ச் மாதம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

கர்ப்பிணியாக இருந்த Rori Hache தனது 18 வயதில், 2017 ஆகஸ்டு மாதம் மாயமானார். ஆனால் 2008ல் Kandis Fitzpatrick மாயமாகியிருந்தார்.

Rori Hache மாயமானதன் ஒரு மாதத்திற்கு பிறகு ஒன்றாரியோ ஏரியில் அவரது சிதைந்த உடல் மீட்கப்பட்டது. அதுவரையில் பொலிசாரின் விசாரணையில் ஆதம் ஸ்ட்ராங் இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர் குடியிருந்த கட்டிடத்தில் கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்படவே, அதில் இருந்து மனித மாமிசம் போன்ற கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

2018 வரை Kandis Fitzpatrick உடல் கண்டெடுக்கப்படவில்லை என்றாலும், ஆதம் ஸ்ட்ராங் குடியிருந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் டி.என்.ஏ மாதிரிகளும் வேட்டைக்கு பயன்படுத்தும் கத்தியும் பொலிசார் மீட்டுள்ளனர்.

நீதிமன்ற விசாரணையில் அந்த இரு பெண்களையும் கொன்று உடல் சிதைத்ததாக ஆதம் ஸ்ட்ராங் ஒப்புக்கொண்டாலும், பொலிசாரால் அதை உறுதிபட நிரூபிக்க முடியவில்லை. இந்த வழக்கில் மிக விரைவில் தண்டனை தீர்ப்பு வழங்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment